Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»11 மாவட்டங்களில் 11,820 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு
    கல்வி

    11 மாவட்டங்களில் 11,820 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    11 மாவட்டங்களில் 11,820 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் 11,820 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிக்கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் காவல்துறையினர், சைபர் குற்றக் காவலர்கள், 2 கல்வியாளர்கள், 2 உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர், நிர்வாகப் பிரதிநிதி, ஆசிரியர் அல்லாத அலுவலரைக் கொண்ட குழுவும் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்படி அமைத்தபோதிலும் அவை முறையாக இயங்குவதில்லை. எனவே, மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமத்தை மாற்றி அமைத்து, மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வைத்துள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் மாணவர்கள் தங்களின் புகார்களை போடலாம்.

    பின்னர் அந்தப் புகார்கள் படிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு வாரமும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 14417 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கென 60 பயிற்சி பெற்ற நபர்கள் பணியில் உள்ளனர். போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    மாணவர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பாக 31,185 பள்ளிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களில் 7,25,432 ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். காவல்துறையின் `அவள்’ நிகழ்வு குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. பல்வேறு விவரங்களுடன் “பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கையேடு” தயாரிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க மாநில அளவில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, 1,4,747 ஆசிரியர்கள் மூலமாக 16,93,132 மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட விநாடி வினா போட்டிகளில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

    கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூர், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில் மாற்றி அமைக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து நீதிபதிகள், பிற மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமங்களை விரைவில் மாற்றியமைக்க வேண்டும். விசாரணை ஆக.5-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    15 நாட்களில் பதவி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்: காமராசர் பல்கலை. ஆசிரியர்கள் எச்சரிக்கை

    December 1, 2025
    கல்வி

    எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வுகள்: இன்று இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியீடு

    December 1, 2025
    கல்வி

    கோவை மாணவி ரிதன்யா அசத்தல்: மாணவர்களுக்கு துணைபுரியும் இணையதளம் அறிமுகம்

    December 1, 2025
    கல்வி

    அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    December 1, 2025
    கல்வி

    நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களை நிர்பந்திக்கவில்லை: விமர்சனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் 

    December 1, 2025
    கல்வி

    திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?
    • சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
    • ராஜமவுலி, மகேஷ் பாபுவின் பட தலைப்பு ‘வாரணாசி’!
    • ‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு
    • சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.