Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் கெடு
    மாநிலம்

    மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் கெடு

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் கெடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில், கடந்த 2013-ல் வன்னியர் சங்க சித்திரை திருவிழா நடந்தது. அப்போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பாமகவினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில், “12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடம் இருந்து வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை. இழப்பீட்டை தீர்மானிக்கும் முன், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்த கூடாது. இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும், சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்படும்,” என உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, எட்டு வாரங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    துணை மின்நிலைய பணியாளர்கள் வேலை நேரத்தில் வெளியே செல்லக் கூடாது: மின்வாரியம் எச்சரிக்கை

    August 4, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்து: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

    August 4, 2025
    மாநிலம்

    சாதிய கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆக.9-ல் போராட்டம்: திருமாவளவன் தகவல்

    August 4, 2025
    மாநிலம்

    கமல் முதல் சூர்யா வரை பேசியது என்ன? – அகரம் ‘விதை’ 15-ம் ஆண்டு விழா ஹைலைட்ஸ்

    August 4, 2025
    மாநிலம்

    ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையமாட்டார்: டிடிவி தினகரன் நம்பிக்கை

    August 4, 2025
    மாநிலம்

    முதல்கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரேமலதா: ஆவடி, திருத்தணி தொகுதிகளில் இன்​று பிரச்சாரம்

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    • உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
    • துணை மின்நிலைய பணியாளர்கள் வேலை நேரத்தில் வெளியே செல்லக் கூடாது: மின்வாரியம் எச்சரிக்கை
    • இந்திய பயணிகளில் 40% க்கும் மேற்பட்டவர்கள் சார்ஜர்கள், உடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கூட மறந்து விடுகிறார்கள், ஆனால் இந்த பொருட்களை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதன் பாப்… நகைச்சுவை நடிகர் மட்டும் அல்ல!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.