Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி: ஜப்தி நடவடிக்கை முன்னெடுப்பால் பரபரப்பு
    மாநிலம்

    தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி: ஜப்தி நடவடிக்கை முன்னெடுப்பால் பரபரப்பு

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி: ஜப்தி நடவடிக்கை முன்னெடுப்பால் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஓசூர்: ஒசூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத மாநகராட்சியின் அசையா சொத்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விவேகானந்தன் (55). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமன திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்தார். மேலும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியான விஷ வாய்வு தாக்கி உயிரிழந்தார்.

    இதனையடுத்து உயிரிழந்த விவேகானந்தனின் மனைவி சாந்தி கணவர் உயிரிப்புக்கு நகராட்சியின் அலட்சியமே காரணம், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டு வழக்கு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனிடையே, உயிரிழந்த விவேகானந்தன் மனைவி சாந்தி, மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அப்போது 2 மாதங்களுக்குள் 9 சதவீதம் வட்டி உடன் சேர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நகராட்சிக்கு மீண்டும் உத்தரவிட்டது. இருப்பினும், மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்காததையடுத்து சாந்தி நீதிமன்றத்தில் உத்தரவை நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து இன்று சார்பு நீதிமன்ற நீதிபதி, மாநகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீஸாருடன் ஓசூர் மாநகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய சென்றனர். நீதிமன்றத்தின் ஜப்தி கடிதத்தை நீதிமன்ற ஊழியர் ஓசூர் மாநகராட்சி ஆணையர் மாரிசெல்வியிடம் வழங்கினார்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தியிடம் ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் வட்டியுடன் சேர்த்து ரூ.20.85 லட்சம் வழங்குவதாக அவகாசம் வழங்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர் சம்மதம் தெரிவித்தையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர். நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய மாநகராட்சி அலுவலகம் வந்த சம்பத்தால் ஓசூரில் பரபரப்பு ஏற்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

    September 12, 2025
    மாநிலம்

    கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    அன்று அண்ணாமலை… இன்று நயினார் நாகேந்திரன்..! – பழனிசாமி ‘ஸ்டைலில்’ பழிபோடும் தினகரன்!

    September 12, 2025
    மாநிலம்

    போலீஸார் மீதான தாக்குதல்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

    September 12, 2025
    மாநிலம்

    திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹம்மிங் பறவைகளை ஈர்க்க 6 சிறந்த பூக்கள்: உங்கள் தோட்டத்திற்கு தேன் நிறைந்த தாவரங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
    • தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
    • சியா, ஆளி, எள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? AIIMS பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.