Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது” – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
    மாநிலம்

    “அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது” – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது” – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அரியலூர்: அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை காணவில்லை என ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேருந்துகளை தொடங்கி வைத்தபோதே அரசு போக்குவரத்துக்கழகம் என்றுதான் உள்ளது.

    ஏனெனில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் என எழுதினால் நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன் பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின் போது மாற்றப்பட்டது. 13 வருடங்களுக்கு பிறகு புதிய செய்தி போல இவ்வாறு சிலர் தேவையற்ற சர்ச்சைகளை செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பேருந்துகள் பழமையாக உள்ளது என்றனர். இதையடுத்து தமிழக முதல்வர் புதிய பேருந்துகளை வாங்கி பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் புதிய பேருந்துகள் வரவுள்ளன.

    அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களில் தற்போது மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதை குற்றம் சொல்வது என தெரியாமல் இந்த பிரச்சினையை உருவாக்கி உள்ளனர். உதாரணத்துக்கு மெட்ராஸ் மாகாணம் என இருந்ததை இந்த மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள்.

    எனவே, இவர்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. ஒரு ஆட்சியில் நடந்ததை அடுத்த ஆட்சியில் மாற்றுகின்றனர் என குற்றச்சாட்டை கொண்டு வருவதால் அதனை அப்படியே கொண்டு செல்லவேண்டியுள்ளது. மேலும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரிபவர்கள் இது உதவிகரமாக, வசதியாக இருப்பதாக தெரிவிப்பதால் இது அப்படியே உள்ளது.

    கடந்த ஒரு வருடத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த காலத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இந்த ஓராண்டில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். காரணம், அரசு போக்குவரத்து கழகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தனியார் பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்கள், தற்போது அரசு பேருந்தில் பயணம் செய்கின்றனர்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    மாநிலம்

    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

    July 1, 2025
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    July 1, 2025
    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா
    • போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.