Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ
    உலகம்

    பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என அமெரிக்காவில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனுக்கு வந்துள்ள நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் கருத்தை எடுத்துரைக்க நியூயார்க் வந்துள்ளது.

    பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் ஆற்றிய உரையில், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை. மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே தகராறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாமல் இருக்க முடியாது.

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இந்திய உளவு அமைப்பான ரா (RAW) ஆகியவை அமர்ந்து பேசி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் கணிசமாகக் குறைவதைக் காண்போம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

    ஆபரேஷன் சிந்தூரின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களாலும், இந்தச் சூழ்நிலையில் அமைதியைத் தேட வேண்டிய தேவையாலும் பாகிஸ்தான் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பூட்டோவின் தற்போதைய சமாதான நிலைப்பாடு காட்டுகிறது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் தரப்பு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்திய விமானப்படையால் பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தொடர்ச்சியான பகுப்பாய்வின்படி, 6 பிஏஎப் போர் விமானங்கள், இரண்டு உயர் மதிப்புள்ள விமானங்கள், 10-க்கும் மேற்பட்ட யுசிஏவி (UCAV), ஒரு சி-130 போக்குவரத்து விமானம் மற்றும் பல கப்பல் ஏவுகணைகள் ஆகியவை இந்திய வான்வழி ஏவுகணைகள் மற்றும் தரையிலிருந்து பாயும் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டன எனும் தகவல் வெளியாகியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘பணம் இல்லாத 7 நாட்கள்’: மர்மமான காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய -ஆரிஜின் சிட்னி டீனேஜர் அனிஷா சதிக் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 2, 2025
    உலகம்

    மீண்டும் தீ வரிசையில் உள்ள சர்வதேச மாணவர்கள்: விசா பதவிக்காலத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகி முன்மொழிகிறார் – இந்தியாவின் நேரங்கள்

    July 1, 2025
    உலகம்

    ‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

    July 1, 2025
    உலகம்

    இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

    July 1, 2025
    உலகம்

    தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமரை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்

    July 1, 2025
    உலகம்

    சிங்கப்பூர் நைட்ஸ்பாட் மரணம்: அபாயகரமான கும்பல் தாக்குதலுக்காக இந்திய மூல மனிதர்; 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அமல்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
    • போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
    • அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
    • தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஜூலை 3-ல் தீர்ப்பு
    • திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.