Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஞ்சாப் | ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை அளித்தவர் கைது!
    தேசியம்

    பஞ்சாப் | ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை அளித்தவர் கைது!

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஞ்சாப் | ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை அளித்தவர் கைது!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சண்டீகர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ நடமாட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம், தார்ன் தரனிலுள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -உடன் தொடர்பில் இருந்ததாகும், தகவல்களைப் பரிமாற பணம் பெற்றதாகவும், பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநில டிஜிபி தனது எக்ஸ் பதிவொன்றில் வெளிட்டுள்ள பதிவில் கூறியதாவது: பஞ்சாப் மாநில உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலின்படி, தர் தரன் போலீஸாருன் இணைந்து செயல்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது, ககன்தீப் சிங் என்ற ககன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் கோபால் சிங் சவ்லா ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய நடமாட்டம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்துள்ளார்.

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நமது ராணுவத் துருப்புகளின் நடமாட்டங்கள் மற்றும் மூலோபாய இடங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தொடக்கநிலை விசாரணையில் ககன்தீப் சிங், கடந்த ஐந்து ஆண்டுகளாக பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளரான கோபால் சிங் சவ்லாவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் மூலமாக ககன்தீபுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தகவல்களைப் பரிமாற அவர் பணம் பெற்றுள்ளார்.

    இந்திய உளவுத்துறை அதிகாரிகளால் ககன் தீப்பிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள மொபைல் போனில் இருந்து, பகிரப்பட்ட தகவல்களும், 20 ஐஎஸ்ஐ தொடர்புகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த உளவு அமைப்பின் முழுமையான நோக்கம் நிதியாதாரம், தொழில்நுட்பங்கள் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது. தார்ன் தரன் நகர காவல் நிலையத்தில், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு டிஜிபி தெரிவித்துள்ளார்.

    பஹஸ்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாத நிலைகள் அழிக்கப்பட்டன. முன்னதாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மலேர்கோட்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறுபேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

    August 1, 2025
    தேசியம்

    காங்கிரஸின் ‘இந்து பயங்கரவாதம்’ சதி முறியடிக்கப்பட்டுள்ளது: மாலேகான் தீர்ப்பு குறித்து பாஜக கருத்து

    July 31, 2025
    தேசியம்

    Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

    July 31, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர்

    July 31, 2025
    தேசியம்

    இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

    July 31, 2025
    தேசியம்

    “தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?
    • பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு
    • பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்
    • ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.