Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஞானசேகரனுக்கு தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் சிறை: 207 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
    மாநிலம்

    ஞானசேகரனுக்கு தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் சிறை: 207 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

    adminBy adminJune 2, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஞானசேகரனுக்கு தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் சிறை: 207 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்யக் கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    புழல் சிறையில் இருந்த ஞானசேகரனை போலீஸார் இன்று (ஜூன் 2) மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 207 பக்க விரிவான தீர்ப்பை நீதிபதி வழங்கினார். பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின்படி ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகள் மற்றும் அதற்கான தண்டனை விவரம்:

    > விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் (பிரிவு 329) – 3 மாத சிறை.

    > செல்ல விடாமல் தடுத்து நிறுத்துதல் (126-2) – 1 மாத சிறை.

    > வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல் (87) – 10 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.

    > காயம் ஏற்படுத்துதல் (127-2) – 1 ஆண்டு சிறை.

    > விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் (75-2) – 3 ஆண்டு கடுங்காவல் சிறை.

    > கடுமையாக தாக்குதல் (76) – 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.

    > மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல் (64-1) – ஆயுள் தண்டனை. இதில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது. ரூ.25 ஆயிரம் அபராதம்.

    > கொலை மிரட்டல் விடுத்தல் (351-3) – 7 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.

    > வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல் (238-பி) – 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்.

    > தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறி வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல் (தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-இ) – 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்.

    > தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4. பாலியல் குற்றச்சாட்டுக்கான பிரிவில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட பிரிவில் தண்டனை விதிக்கப்படவில்லை.

    மொத்த அபராத தொகை ரூ.90,000-ஐ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகள் அனைத்தையும் அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    மேலும், ‘கடந்த 2010 முதல் தற்போது வரை இந்த வழக்கு இல்லாமல் 37 குற்ற வழக்குகள் ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவருக்கு கருணை காட்ட முடியாது. எனவே, பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

    அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசைதிருப்பவும், மிரட்டுவதற்காகவும் ‘சார்’ என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினார் என்பது அறிவியல்பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் அவர் ஒருவர் மட்டும்தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்த நீதிமன்றம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறது.

    அதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை கசியவிட்ட காரணத்துக்காக அந்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. தற்போது அபராத தொகை ரூ.90 ஆயிரத்தை அந்த பெண்ணுக்கு வழங்க இந்த நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்ட பணிகள் ஆணை குழு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    நடந்தது என்ன? முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 டிசம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டூர்புரத்தை சேர்ந்த டி.ஞானசேகரன் (37) என்பவரை போலீஸார் மறுநாள் 25-ம் தேதி கைது செய்தனர்.

    இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சினேகப்பிரியா, ஐமால் ஜமான், பிருந்தா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரியில் ஞானசேகரனுக்கு எதிராக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பின்னர், இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு கடந்த மார்ச் 7-ம் தேதி மாற்றப்பட்டது. மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) எம்.ராஜலட்சுமி முன்பு வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தியும், கைதான ஞானசேகரன் தரப்பில் சட்ட பணிகள் ஆணை குழு தரப்பு வழக்கறிஞர்கள் கோதண்டம், ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 29 அரசு தரப்பு சாட்சிகள், 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இரு தரப்பிலும் வாதங்கள் கடந்த மே 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என அறிவித்து நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28-ம் தேதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி, தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!

    June 29, 2025
    மாநிலம்

    ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்

    June 29, 2025
    மாநிலம்

    ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    June 29, 2025
    மாநிலம்

    தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

    June 29, 2025
    மாநிலம்

    கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    June 29, 2025
    மாநிலம்

    2026 தேர்தலை பாமக ஒரே அணியாக எதிர்கொள்ளும்: பொருளாளர் சையத் மன்சூர் உறுதி

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% வாக்குகள் இலக்கு: களப்பணியில் விருதுநகர் திமுக தீவிரம்!
    • பல் மருத்துவர்களின் கூற்றுப்படி, பற்களை ரகசியமாக அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விருதுநகரே விடைபெறுகிறேன்…’ – வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்
    • 477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!
    • ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.