Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்
    மாநிலம்

    “என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    “படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். தனது மகனுக்காக நடத்தப்பட்ட இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் வேடிக்கையாக இருக்கின்றன.

    பாஜகவையும் மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்.

    தனது மகன் தான் இளவரசர், அவர் தான் கட்சியின் எதிர்காலம், அவர் இடும் கட்டளைகளை ஏற்று திமுகவினர் நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த தீர்மானம். கட்சி தொடங்கிய காலம் முதல் மாநில சுயாட்சிக்காக தீர்மானம் நிறைவேற்றும் திமுகவினர், தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது இதற்காக ஒரு துரும்பையாவது தூக்கி போட்டு இருப்பார்களா?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை பற்றி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் திமுகவினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை மறந்து போவது ஏன்? ‘யார் அந்த சார்’ என்று தமிழகத்தில் இன்றும் எதிரொலிக்கும் அந்தக் கேள்வியை காது கொடுத்து கேட்கும் தைரியம் திமுகவினருக்கு இல்லை.

    படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, 200 இடங்கள் என்றவர்கள் தற்போது தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை. மக்கள் பணத்தை சுருட்டி ஒய்யார வாழ்வு வாழும் திமுகவினர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்து செய்த தவறுகளுக்காக தண்டனை பெற்று சிறைக்கு செல்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரன் விவகாரம்: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    August 20, 2025
    மாநிலம்

    “நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாடு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்” – நயினார் நாகேந்திரன்

    August 20, 2025
    மாநிலம்

    தவெக மாநாட்டு திடலில் சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் – மதுரையில் நடந்தது என்ன?

    August 20, 2025
    மாநிலம்

    பாஜக, என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பேச்சு

    August 20, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஆக.26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    August 20, 2025
    மாநிலம்

    வன்னியர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி: அன்புமணி

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆகாஷ் பாஸ்கரன் விவகாரம்: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    • 30 நாட்களுக்குள் ‘ஹிப்போகாம்பஸ்: மூளையின் நினைவக மையத்தை’ வலுப்படுத்தக்கூடிய எளிதான மாற்றங்கள்
    • எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் 100 வது பால்கன் 9 ஆண்டின் விமானத்தில் 24 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பட்டியல் சமூகத்துக்கான 17% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
    • ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.