Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘திருவிழா இல்லாத காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை’ – வாகை சந்திரசேகர்
    மாநிலம்

    ‘திருவிழா இல்லாத காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை’ – வாகை சந்திரசேகர்

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘திருவிழா இல்லாத காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை’ – வாகை சந்திரசேகர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: “தமிழகத்தில் திருவிழா இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.

    திருநெல்வேலியில் மண்டல அளவிலான நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் வாகை சந்திரசேகர் கூறியது: “திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த 371 கலைஞர்களுக்கு ரூ.13.17 லட்சம் மதிப்பில் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள், நாடக மற்றும் திரைப்பட நடிகர்கள் போன்ற கலைஞர்களுக்காக தமிழக முதல்வர் பெருமளவு நிதி ஒதுக்கி, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். மாவட்ட ரீதியாக கலைஞர்களை நேரடியாக அரசு துறைகள் மூலம் சந்தித்து அவர்களது குறைகளை சரி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி பணிகள் நடந்து வருகிறது. அரசுத் துறைகளில் மாவட்ட ரீதியாக கலைஞர்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகள் வழங்கி, அவர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள நாதஸ்வர மற்றும் தவிலிசை கலைஞர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுக்கு இயல் இசை நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு அரசு விழாக்களிலும், கோயில்களில் நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு இசைப் பள்ளியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர் என்ற அரசாணையை திருத்தி அமைப்பதற்கும், வயது வரம்பை குறைப்பதற்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு ஆண்டின் 6 மாத காலம் பணி இருக்கும். பணி இல்லாத மீதமுள்ள 6 மாத காலத்திற்கு அவர்களது வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை செய்வதற்கும் அரசு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புற இசை கலைஞர்கள் நாடகங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் திருவிழாக்கள் அதிகம் உள்ள சூழலை கருத்தில் கொண்டு ஒரு மாதத்துக்குள் அந்த தளர்வுகளை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்

    July 27, 2025
    மாநிலம்

    இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா

    July 27, 2025
    மாநிலம்

    மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்

    July 27, 2025
    மாநிலம்

    தண்டவாளம் குறைபாடு, உபகரணம் செயலிழப்புடன் மனித தவறுகளே ரயில் விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர்

    July 27, 2025
    மாநிலம்

    ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: முக்கிய குற்றவாளி மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை

    July 27, 2025
    மாநிலம்

    உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபடுகிறார்: முத்தரசன் கண்டனம்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்
    • இந்த 10 வைட்டமின் கே நிறைந்த உணவுகளுடன் வெறும் 30 நாட்களில் இயற்கையாகவே வலுவான எலும்புகளைப் பெறுங்கள்
    • ‘ஞான பாரத இயக்கம்’ திட்டத்துக்கு வித்திட்ட தஞ்சை மணிமாறன்: பிரதமர் மோடி புகழாரம்
    • இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா
    • ஆஸ்ட்ரோவின் சா யூன் வூ தனது ஜூலை 28 இராணுவப் பட்டியலுக்கு முன்னதாக ஆர்டன் சோவுடன் KPOP அரக்கன் ஹண்டர்ஸ் பாடல் இலவச கவர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.