Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல’ – பந்தல்குடி சம்பவம் பற்றி ஸ்டாலின் விளக்கம்
    மாநிலம்

    ‘துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல’ – பந்தல்குடி சம்பவம் பற்றி ஸ்டாலின் விளக்கம்

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல’ – பந்தல்குடி சம்பவம் பற்றி ஸ்டாலின் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “திமுக பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கட்சி வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்துக்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர் -சிறுமியர், பள்ளி – கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா வயதினரும் கையசைத்தும், கை கொடுத்தும், செல்ஃபி எடுத்தும், இருவண்ணக் கொடியை அசைத்தும் வரவேற்பளித்தனர்.

    ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதல்வரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன்.

    அதுமட்டுமல்ல, அந்த இடத்துக்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.

    துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, திமுகவை விமர்சிப்பதையே முழுநேர , பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.

    பொதுக்குழு இதயம் என்றால், அதில் தொண்டர்களின் குரல்தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதைக் கட்சித் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன். நான் தலைமையுரையாற்ற எழுந்தபோது, எதிரில் இருப்பவர்கள் ஏழாயிரம் பேராகத் தெரியவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்களான தொண்டர்கள் அத்தனை பேரையும் மனக்கண்ணால் பார்த்தபடிதான் பேச்சைத் தொடங்கினேன்

    தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து, அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் தலைமையுரையின் முக்கியப் பகுதியாகும். தொண்டனாகத்தான் என் கட்சிப் பணி தொடங்கியது. தொண்டர்களுடன்தான் என் கட்சிப் பணி தொடர்ந்தது. தொண்டர்களால்தான் கட்சியின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். இப்போதும் கட்சியின் முதன்மைத் தொண்டன் என்பதில்தான் நான் பெருமை கொள்கிறேன்.

    உங்களை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்,” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விசிகவின் நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் இடைநீக்கம்: திருமாவளவன்

    July 20, 2025
    மாநிலம்

    இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட்

    July 20, 2025
    மாநிலம்

    நீலகிரியில் பரவலாக மழை: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடல்

    July 19, 2025
    மாநிலம்

    ‘வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுக’ – சென்னையில் 3,000+ பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டு பேரணி!

    July 19, 2025
    மாநிலம்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    July 19, 2025
    மாநிலம்

    பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கால்நடை மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!
    • விசிகவின் நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் இடைநீக்கம்: திருமாவளவன்
    • பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
    • இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட்
    • காசியாபாத்தில் சைவ உணவு மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கும் கேஎஃப்சி: காரணம் என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.