Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக இடம்​பெறும் கூட்டணி ஆட்சி அமையும்: அன்புமணி நம்பிக்கை
    மாநிலம்

    தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக இடம்​பெறும் கூட்டணி ஆட்சி அமையும்: அன்புமணி நம்பிக்கை

    adminBy adminJune 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக இடம்​பெறும் கூட்டணி ஆட்சி அமையும்: அன்புமணி நம்பிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். சென்னை உத்தண்டியில் பாமகவின் 8 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்றும் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது முக்கியமில்லை வெற்றி பெற வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமாக வெற்றி பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முதல்வருக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்றால் என்னவென தெரியாத தமிழக அரசு இருக்கிறது. ஆனால், சமூகநீதியில் பிஎச்டி படித்திருக்கிறோம். சமூகநீதி என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அவர் கொள்கைகளை கடைப்பிடித்து முன்னேறுவோம்.

    மற்றவர்களை ஆட்சியில் அமரவைக்க பாமகவை தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் விரைவில் செய்யப்படும். வரும் 2026-ல் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும். அதன்பிறகு தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். பாமகவில் தற்போது சிறிய குழப்பம் உள்ளது. காலப்போக்கில் எல்லாம் மறைந்து விடும். பாமக ஜனநாயகக்கட்சி. நிரந்தரம் தலைவர் என யாருக்கும் கிடையாது.

    பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுபவருக்கே கடிதம் கொடுக்கும் அதிகாரம் வழங்கப்படும். தற்போது நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனினும், தொண்டனாகவே செயல்படுகிறேன். அனைத்து மதம், ஜாதிக்கு பொதுவான கட்சி பாமக. நிர்வாகிகளுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன்.

    யார் யாருக்கு பொறுப்பு கொடுத்தோமோ அவர்கள் அனைவரும் தொடர்வார்கள். எந்த குழப்பமும் யாருக்கும் வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழு தலைவர் செல்வகுமார், வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் வைத்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி

    July 26, 2025
    மாநிலம்

    தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி

    July 26, 2025
    மாநிலம்

    யார் அணியில் புதுக்கோட்டை மாநகர் திமுக? – வெடித்தது அடுத்த சர்ச்சை

    July 26, 2025
    மாநிலம்

    ‘தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்’ – தெய்வ சேக்கிழார் விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்

    July 26, 2025
    மாநிலம்

    தேவநாதன் யாதவ் சொத்து பட்டியலில் இருந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் மாயமான குற்றச்சாட்டு: போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 26, 2025
    மாநிலம்

    சத்யா வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பியது யார்? – சம்பத் மீது சந்தேகக் கொக்கி போடும் ஆதரவாளர்கள்

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி
    • சிறுநீரக சேதம் விளக்கப்பட்டுள்ளது: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகள் உங்கள் சிறுநீரகங்களுக்கு என்ன செய்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்
    • தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி
    • கோல்ட் பிளே ஸ்டாரின் முன்னாள் க்வினெத் பேல்ட்ரோ வானியலாளரின் “செய்தித் தொடர்பாளர்” ஆகிறது: சமூக ஊடகங்கள் வெடிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.