Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, March 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை
    உலகம்

    ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

    முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு ரயில் மீது விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடிபாடுகளில், குண்டுவெடிப்பினால் பாலம் இடிந்ததில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு சாலையில் விழுந்தது, இதனால் தீ விபத்தும் ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்ததற்கும் குண்டுவெடிப்புகளே காரணம் என்று அறிக்கை ஒன்றில், ரஷ்ய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது என்றாலும் குண்டுவெடிப்புக்கான காரணம் என்னவென்று தெரிவிக்கவில்லை. மீட்புக்குழுவினர் பாலங்கள் இடிந்த இரண்டு இடங்களிலும் இடிபாடுகளை அகற்றியுள்ளனர். காயம்பட்ட சிலர் சிகிச்சைக்காக மாஸ்கோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, பிரையான்ஸ் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆய்வின் போது வேறு சில தண்டவாளங்கள் சேதம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது என்று மாஸ்கோ ரயில்வே தெரிவித்துள்ளது. என்றாலும் அது பாலம் இடந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என்று குறிப்பிடவில்லை. கடந்த காலங்களில் உக்ரைன் ஆதரவு நாசகாரர்கள் ரஷ்யாவின் ரயில்வே உள்கட்டமைப்பை தாக்கி அழித்தாக அதிகாரிகள் சிலர் குற்றம்சாட்டினர்.

    உக்ரைன் மொழியில் சுருக்கமாக GUR என்று அழைக்கப்படும் ராணுவ உளவுப்பிரிவு, உணவு மற்றும் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்ய ராணுவ ரயில் கிரிமியாவுக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. என்றாலும் இந்தத்தாக்குதல் GUR பிரிவால் நடத்தப்பட்டது என்று கூறவில்லை. பாலம் இடிந்த சம்பவத்தையும் தெரிவிக்கவில்லை.

    அதன் அறிக்கையில், ரஷ்ய ஆக்கிரமிப்பு சபோரிஜியா மற்றும் கிரிமியாவுடனான ரஷ்யாவின் முக்கிய தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா கிரிமியாவை 2014-ல் தாக்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. கடந்த 2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது நடந்த முழு அளவிலான தாக்குதலில் இருந்து ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா பகுதியில் முன்னேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    தங்கள் ‘விலைமதிப்பற்ற’ தலைமுறை பண்ணையில் AI தரவு மையத்தை உருவாக்க $26 மில்லியன் சலுகைக்கு ‘இல்லை’ என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 29, 2026
    உலகம்

    ஜே.டி.வான்ஸ் யுஎஃப்ஒக்களை ‘பேய்கள்’ என்று காட்டுகிறார் மற்றும் விவரிக்கப்படாத நிகழ்வுகளில் அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணர சபதம் செய்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    உலகம்

    H-1B, PERM ஊதிய வரம்புகளில் கூர்மையான உயர்வை அமெரிக்கா முன்மொழிகிறது; நுழைவு நிலை பணியமர்த்தலை மோசமாக பாதிக்கலாம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    உலகம்

    2001 இல் தடயமே இல்லாமல் காணாமல் போன அம்மா உயிருடன் கண்டெடுக்கப்பட்டார், உணர்ச்சிவசப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளை சந்தித்தார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    உலகம்

    ‘அவரது மூளையின் ஒரு பகுதி காணவில்லை’: சிகாகோவில் லயோலா பல்கலைக்கழக மாணவர் ஷெரிடன் கோர்மனைக் கொன்றதற்காக வெனிசுலா குடியேறியவரின் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    உலகம்

    விஸ்கான்சின் கத்திக்குத்து: விஸ்கான்சின் திகில்: 41 வயதான பெண் 107 முறை குத்தப்பட்டார், கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தங்கள் ‘விலைமதிப்பற்ற’ தலைமுறை பண்ணையில் AI தரவு மையத்தை உருவாக்க $26 மில்லியன் சலுகைக்கு ‘இல்லை’ என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜே.டி.வான்ஸ் யுஎஃப்ஒக்களை ‘பேய்கள்’ என்று காட்டுகிறார் மற்றும் விவரிக்கப்படாத நிகழ்வுகளில் அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணர சபதம் செய்தார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சானியா மிர்சா-ஷோயிப் அக்தர் முதல் ஷேக்கா மஹ்ரா-ஷேக் மனா அல் மக்தூம் வரை: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய 5 அசிங்கமான பொது விவாகரத்துகள்
    • தாரா பிராச் மேற்கோள்: தாரா பிராச்சின் மேற்கோள்: “பாதுகாக்கப்படாத இதயத்துடன், நாம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் காதலிக்கலாம். நாம் ஆகலாம்…” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சூரத்தில் உள்ள 5 உயரடுக்கு குடியிருப்பு பகுதிகள் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.