Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டெல்லி ‘மதராசி கேம்ப்’ மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப உதவி: தமிழக அரசு உறுதி
    மாநிலம்

    டெல்லி ‘மதராசி கேம்ப்’ மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப உதவி: தமிழக அரசு உறுதி

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லி ‘மதராசி கேம்ப்’ மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப உதவி: தமிழக அரசு உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: புதுடெல்லியின் ‘மதராசி கேம்ப்’ குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் என்றும், வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மதராசி கேம்ப்’ என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசைப் பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றம், ‘மதராசி கேம்ப்’ என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம் / ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பினால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது.

    எனவே, டெல்லி நகர்புற குடியிருப்பு மேம்பாட்டு ஆணையம் (Delhi Urban Shelter Improvement Board)சட்டம் மற்றும் டெல்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015-ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, குடியிருப்பாளர்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பு, தகுதி தீர்மானக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த செயல்முறையின் அடிப்படையில், 370 குடியிருப்பாளர்களில் 215 பேர் தகுதியுடையவர்களாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகுதியுடைய பயனாளர்களுக்குத் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் Delhi Urban Shelter Improvement Board பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கான (EWS) குடியிருப்பு யூனிட்டுகள், நரேலா, டெல்லியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மேலும், “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் மே 9-ம் தேதியிட்ட உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவின் படி, ஜூன் 1ம் தேதி முதல் ‘மதராசி கேம்ப்’ பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மதராசி கேம்ப்’ பகுதியில் அனுமதியில்லாத கட்டிடங்களை இடிக்காமல் இருக்க குடியிருப்பாளர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

    தமிழக முதல்வரின் உத்தரவின்படி, புது டெல்லியில் உள்ள ‘தமிழ்நாடு இல்ல’ அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, ‘மதராசி கேம்ப்’ குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

    தமிழக முதல்வரின் வழிநடத்தலின் கீழ், ‘மதராசி கேம்ப்’ குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழக அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்

    August 17, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவையில் இன்று கனமழை

    August 17, 2025
    மாநிலம்

    பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி

    August 17, 2025
    மாநிலம்

    தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை!

    August 17, 2025
    மாநிலம்

    வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வயது 48 – கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

    August 17, 2025
    மாநிலம்

    ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி இடத்தை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்!

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்
    • ஆப்டிகல் மாயை: உங்களுக்கு கூர்மையான கண்கள் இருக்கிறதா? இந்த படத்தில் மறைக்கப்பட்ட எண்ணைக் கண்டறியவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம்: விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து
    • நீலகிரி, கோவையில் இன்று கனமழை
    • ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.