Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»மறக்குமா நெஞ்சம்: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்த சடகோபன் ரமேஷ்!
    விளையாட்டு

    மறக்குமா நெஞ்சம்: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்த சடகோபன் ரமேஷ்!

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மறக்குமா நெஞ்சம்: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்த சடகோபன் ரமேஷ்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வர்ணனையாளராக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ். ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசன் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜியோ ஸ்டார் நிபுணரான அவர் சொல்லியுள்ளது என்ன என பார்ப்போம்.

    ‘தம்பி’ என பாசத்தோடு மைக்கில் தனது என்ட்ரியை சடகோபன் ரமேஷ் கொடுப்பது வழக்கம். அப்போது இந்திய கிரிக்கெட் அணியில் சக வீரர்கள் உடனான மறக்க முடியாத அவர் தருணங்களை பகிர்வார்.

    “நடப்பு ஐபிஎல் சீசனில் நான் மிகவும் ரசித்த விஷயம் என்றால் அது தோனியின் விக்கெட் கீப்பிங் தான். மும்பையின் சூர்யகுமார் யாதவ், பெங்களுருவில் பிலிப் சால்ட்டை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். அது எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று. 43 வயதானாலும் அவரது கைகளுக்கு 15 வயது என சொல்வது போல இருந்தது. அதேபோல டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியும் அற்புதமாக இருந்தது.

    வர்ணனையை பொறுத்தவரையில் நாங்கள் வீட்டில் எப்படி பேசுகிறோமோ அப்படி தான் பேசி வருகிறோம். வேலை பளு தெரியாமல் இந்த பணியை செய்கிறோம். கிரிக்கெட் குறித்த விவாதம் போல தான் அது இருக்கும். கிரிக்கெட் உணர்வுப்பூர்வமான இணைப்பை கொண்டது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கிரிக்கெட்டை பின் தொடர்வார்கள். ‘நீங்கள் சொன்னதால் தான் அவர் அவுட் ஆனார்’ என்பது மாதிரியான விமர்சனங்கள் சில நேரங்களில் ரசிகர்கள் தரப்பில் இருந்து வரும். அதை கடந்து வர வேண்டும். அது சவாலானது.

    பணியை மிகவும் மகிழ்ச்சியோடு அனுபவித்து செய்வோம். ஒரு முறை நேரலையில் ஷோவில் பேசிக்கொண்டு இருந்த போது எனது போன் ஒலித்தது. அப்போது நாங்கள் ஸ்ரேயஸ் ஐயர் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். நான் என்ன செய்தேன் என்றால். எனது போனை எடுத்து ஸ்ரேயஸ் உடன் பேசுவது போலவே அந்த அழைப்பை ஏற்று பேசினேன். அப்போது சக வர்ணனையாளர்கள் உடன் சேர்ந்து சுமார் 5 நிமிடம் வரை சிரித்துக் கொண்டே அந்த ஷோவை செய்தோம். அது மறக்க முடியாது மகிழ்ச்சியான தருணம்.

    எனது குரலை வைத்தே மக்கள் இப்போது என்னை அடையாளம் காண்கிறார்கள். நான் வாடகை வாகனத்தில் செல்லும் போது போனில் பேசினால் ‘சார், நீங்கள் ரமேஷ் தானே’ என கேட்கின்றனர். தமிழ் வர்ணனையில் இது எங்களுக்கு கிடைத்துள்ள ரீச் என்றும் சொல்லலாம். கரோனா சமயத்தில் முகக்கவசம் அணிந்திருந்த போது கூட எனது குரலை வைத்து ஒருவர் அடையாளம் கண்டார். அதுவும் மறக்க முடியாதது” என தனது வர்ணனை அனுபவங்களை பகிர்ந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 2013 ரன்களை சடகோபன் ரமேஷ் எடுத்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

    June 28, 2025
    விளையாட்டு

    இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    June 28, 2025
    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

    June 28, 2025
    விளையாட்டு

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்!

    June 28, 2025
    விளையாட்டு

    மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம்

    June 28, 2025
    விளையாட்டு

    உஸ்பெகிஸ்தான் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷெஃபாலி ஜாரிவாலாவின் சோகமான மரணம் பெண்கள் புறக்கணிக்கும் உடல்நல அபாயத்தை அம்பலப்படுத்துகிறது: மருத்துவர்கள் அதன் பின்னால் அமைதியான அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறார்கள் – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு
    • ‘ஃபீனிக்ஸ்’ படம் பிடிக்காவிட்டால் என்னை திட்டுங்கள்: தயாரிப்பாளர்
    • “அதிமுகவுக்குள் மோதலை உருவாக்கி கட்சியை காலி செய்ய பாஜக முயற்சி” – முத்தரசன்
    • உணர்வு -நல்ல ஹார்மோன் ஆக்ஸிடாஸின் – இந்தியாவின் நேரங்களை அதிகரிக்க எளிய மற்றும் இயற்கை வழிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.