வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததாக ஆய்வின் முடிவில் தெரிய வந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை யில் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த சத்யா, இந்திராணி, வரதன், அலசந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா, வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சீலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரகுமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, செங்கிலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் நோய் தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதில், கடைசியாக உயிரி ழந்த நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணியின் மகன் ஸ்ரீராம்குமார் என்பவர் தனது தாயார் நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு, தனியார் பல் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை யால் தான் அவர் உயிரிழந்தார். மேலும், எனது தாயாரை போலவே நோய் தொற்று காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு வாணியம்பாடி நகர காவல் நிலையம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழக முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் அளித் திருந்தார்.
இந்த புகார் மீது உரிய விசாரணையை காவல் துறையினர் நடத்தாததால் பொறுமையிழந்த ஸ்ரீராம் குமார் தனியார் மருத்துவ மனை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வாணியம்பாடி நகர காவல் துறையினர் ஸ்ரீராம் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, பிணையில் விடுவித்தனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்ற 8 பேரும் ஒரே மாதிரி நோய் தொற்று காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவ மனையின் மருத்துவக் குழுவினர் இது தொடர்பாக ஆய்வு நடத்தி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறிக்கையை வெளியிட்டனர். இதில், பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அந்த ஆய்வறிக்கையில், “தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திராணி, நர்மதா, சத்யா, வரதன், ஜெய்சீலி, இளங்கோவன், ஆபிசூர் ரகுமான், அனிதா உள்ளிட்ட 8 பேருக்கும் மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று (நியூரோ மெலியோய்டோசிஸ்) நோய் தாக்குதல் ஏற்பட்டு அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக ‘தி லான்செட்டில்’ ஆய்வில் தெரிய வந்தது.
பல் சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு பல் மருத்துவ மனையில் பெரியோஸ்டீயல் லிஃப்ட் எனப்படும் கருவியை மருத் துவர்கள் பயன்படுத்துவார்கள். இந்த கருவியை பயன்படுத்திய பிறகு சுத்தமாக பாதுகாக்கப்பட்ட இடங்களில் அந்த கருவியை வைத்திருக்க வேண்டும்.
ஆனால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவ மனையில் பெரியோஸ்டீயல் லிஃப்ட் கருவி அசுத்தமான நிலையில் இருந்த நிலையில் அதை சுத்தம் செய்யாமல் நோயாளிகளுக்கு அப்படியே சிகிச்சை அளித்ததால் அதன் மூலம் பாக்டீரியாவானது சிகிச்சை வழியாக நோயாளியின் மூளைக்குள் சென்று 8 நோயாளிகளுக்கு நியூரோ மெலி யோய்டோசிஸ் எனப்படும் நோய் பாதிக்கப்பட்டதால் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் புற நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, காய்ச்சல், தலை வலி, மூளையில் சீழ் பிடித்தல், மண்டை நரம்பு வாதம் போன்ற அறிகுறிகளால் அவர்கள் உயிரி ழந்தது தெரியவந்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மருத்துவ குழுவினர் வெளியிட்ட ஆய் வறிக்கையை அடிப்படையாக கொண்டு வாணியம்பாடி கச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவ மனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சி தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
பின்னர் இணை இயக்குநர் ஞானமீனாட்சி, செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘வாணியம் பாடியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பான ஆய்வறிக்கை மருத்துவத்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு விசாரணை முடிவில் முழு விவரம் தெரிய வரும்’’ என்றார்.
பல் மருத்துவர்கள் சங்கம் மறுப்பு: அகில இந்திய பல் மருத்துவர் சங்கங்களின் துணைத் தலைவர் கோகுல்ராஜ் மற்றும் மருத்துவக் குழுவினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய பல் மருத்துவ மனை சங்கங்களின் அடிப்படையில் அரசு விதிப்படி அரசின் நெறிமுறைகளின் படிதான் பல் மருத்துவமனைகள் செயல் பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் மூலம் ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவமனையில் எடுத்துச் செல்லப்பட்ட பரிசோதனையின் போது கோவிட் போன்று மழைக்காலம் என்பதால் மாசடைந்த உப்பு கரை சல்கள் பயன்படுத்துவதால் கூட தொற்று ஏற்பட்டு இருக் கலாம். ஆனால், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் மூலம் தொற்று பரவியதாக வந்த அறிக்கை முற் றிலும் தவறானது.
வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று அதற்கான அறிவுரை கேட்டு சென்றனர். கடைசியாக சிகிச்சைக்கு வந்த இந்தி ராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார் என்பவர் மருத்துவ மனையின் கதவில் 8 பேர் சிகிச்சை பெற்று உயிரிழந்தாக நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றார். எனவே, ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மூலம் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.