Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா உருக்கம்
    தேசியம்

    காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா உருக்கம்

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா உருக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு தெளிவாக தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை வழங்கியது. இந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லையான பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் பூஞ்ச் பகுதிக்கு சென்று பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அமித் ஷா கூறியதாவது:

    பாகிஸ்தான் தாக்குதலில் இங்குள்ள மக்கள் தங்களது குடும்பத்தில் ஒருவரை பறிகொடுத்துள்ளனர். எனவே, அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட எந்தவிதமான நிவாரண உதவிகளும் இங்குள்ள மக்களின் இழப்பை ஒருபோதும் ஈடு செய்யாது என்பது எனக்கு நன்கு தெரியும். மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் அரசும், இந்திய மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

    தீவிரவாதத்தையும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்பதை பாகிஸ்தான் பிரதமர் ஷொபஸ் ஷெரிபிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டோம். ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது. அதற்காகத்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானின் விமான தளங்களை தாக்கி அழித்ததன் மூலம் அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம். இதன்பிறகே அவர்கள் போர் நிறுத்தத்துக்கு இறங்கி வந்தனர். நமக்கு தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வலுவான பதிலடி தரப்படும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் அலர்ட்

    August 14, 2025
    தேசியம்

    கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து – உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    தேசியம்

    நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை: பிரதமர் மோடி

    August 14, 2025
    தேசியம்

    எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடு: வீரர் உயிரிழப்பு

    August 14, 2025
    தேசியம்

    ‘டி ஷர்ட்’டில் எனது படம், பெயரை பயன்படுத்த பிரியங்கா, ராகுலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? – வாக்காளர் மின்டா தேவி எதிர்ப்பு

    August 14, 2025
    தேசியம்

    வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரச்சாரம்: தேசியக்கொடி ஏற்றினார் அமித் ஷா

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்க வரி விதிப்பால் கரூர் ஜவுளி தொழிலுக்கு பாதிப்பு எத்தகையது?
    • செப்டம்பரில் காதல் மாற்றும் இமயமலை மலைவாச நிலையங்கள்; மழை இல்லை ரெயின்போஸ்!
    • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
    • 10 நோய்கள் நாய்கள் ரேபிஸைத் தவிர மனிதர்களுக்கும் பரவக்கூடியவை மற்றும் பாதுகாப்பாக இருப்பது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆழமான கடல் பணி: இந்திய அக்வானாட்ஸ் டைவ் பதிவு 5,000 மீட்டர்; கடலுக்கடியில் ஆய்வுக்கான மைல்கல் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.