Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா
    தேசியம்

    கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

    ‘உலகை கவலையடையச் செய்வது எது?’ எனும் தலைப்பில் கடந்த மே மாதம் தாங்கள் நடத்திய கணக்கெடுப்பு குறித்த தகவல்களை ‘இப்ஸோஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தேசிய அளவில் இந்திய அரசின் மீதான நம்பிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய பதிப்பில், தேசிய அளவிலான நம்பிக்கை 62% ஆக இருந்த நிலையில், மே 2025ல் அது 3 புள்ளிகள் அதிகரித்து 65% ஆக உயர்ந்துள்ளது.

    நம்பிக்கை குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொட்ர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மே மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’-க்குப் பிறகு தேசிய அளவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில் 65 சதவீதம் பேர் நாடு சரியான திசையில் செல்கிறது என்று நம்புகிறார்கள். இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி 37 சதவீதமாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் அவநம்பிக்கை நிலவுகிறது. பிரான்ஸ், தென் கொரியா மற்றும் பெரு ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன.

    மே 7 அதிகாலையில் ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டவுடன் இந்தியாவில் திடீரென நம்பிக்கை அதிகரித்தது. சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்திய ராணுவ நடவடிக்கை மூலம் ஒன்பது பயங்கரவாத தளங்களில் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய நபர்களும், அவர்களின் கட்டமைப்புகளும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டன.

    பயங்கரவாதம் ஒரு கவலை: பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பயங்கரவாதம் குறித்த பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை தேசிய கவலையின் முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 11 புள்ளிகள் அதிகரித்து, 26 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது அக்டோபர் 2019-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவாகும்.

    பணவீக்கம் (37 சதவீதம்) மற்றும் வேலையின்மை (33 சதவீதம்) ஆகியவற்றுக்குப் பின்னால் இந்தியாவின் மூன்றாவது பெரிய கவலையாக பயங்கரவாதம் உள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையின்மை கவலைகள், முந்தைய பதிவோடு ஒப்பிடுகையில் தலா 2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

    உலகளாவிய தெற்கில் நம்பிக்கை: உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் நம்பிக்கையை அதிக அளவில் கொண்டுள்ளன. சிங்கப்பூர் 77 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து மலேசியா (69 சதவீதம்), இந்தோனேசியா (67 சதவீதம்) மற்றும் இந்தியா (65 சதவீதம்) உள்ளன. அர்ஜென்டினா (56 சதவீதம்), தாய்லாந்து (45 சதவீதம்), மெக்சிகோ (45 சதவீதம்) ஆகியவை முதல் ஏழு இடங்களைப் பிடித்துள்ளன.

    மாறாக, பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. 19 சதவீதம் மட்டுமே தங்கள் நாடு சரியான பாதையில் செல்வதாக பிரான்ஸ் மக்கள் கூறுகிறார்கள். தென் கொரியா (15 சதவீதம்) மற்றும் பெரு (9 சதவீதம்) என்பதாக நம்பிக்கை அளவைப் பதிவு செய்துள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    • ஷெபாலி ஜாரிவாலா மரணம்: வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது? நிபுணர்கள் ஏன் அதற்கு எதிராக அறிவுறுத்துகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்
    • திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
    • மீன்வளத்திற்காக ஒரு செல்ல பெட்டா மீன் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.