Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘டிமான்டி காலனி’யும், 10 வருட பயணமும்: அஜய் ஞானமுத்து பகிர்வு
    சினிமா

    ‘டிமான்டி காலனி’யும், 10 வருட பயணமும்: அஜய் ஞானமுத்து பகிர்வு

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘டிமான்டி காலனி’யும், 10 வருட பயணமும்: அஜய் ஞானமுத்து பகிர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. இதன் முதல் 2 பாகங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது 3-ம் பாகத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதனை படக்குழு உறுதி செய்யவில்லை.

    தற்போது ‘டிமான்டி காலனி’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அஜய் ஞானமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. 10 வருடங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் ‘டிமான்டி காலனி’ 10 வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது.

    நாம் விரும்பியதை செய்யும்போது அதற்கான ஆதரவும் அன்பும் தொடர்ந்து கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னுடைய முதல் படமான ‘டிமான்டி காலனி’ நான் இயக்குநராகப் பணிபுரிவதற்கு முந்தைய கால கட்டத்தின் பிரதிபலிப்பாகும். ஏனெனில் ‘ஹாரர்’ படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது.

    ‘தி எக்ஸார்சிஸ்ட்’, ‘தி ஓமன்’ மற்றும் ‘தி கன்ஜூரிங்’ போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளைக் கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. அதில்தான் ‘டிமான்டி காலனி’ என்ற எனது ஹாரர் ஜானர் படத்தை உருவாக்கினேன்.

    மோக்னா மூவிஸ் எம்.கே தமிழரசு, அருள்நிதி மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால், ‘டிமான்டி காலனி’ திரைப்படம் உருவாகி இருக்காது. அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    டிமான்டி காலனி திரைப்படம் ஒரு நினைவாக இல்லாமல் ஒரு புதிய உலகமாக மாறி நிற்பதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.அருள்நிதி ‘டிமான்டி காலனி’ உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பது எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது. மேலும், தொழில்துறை நண்பர்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் தரமான படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

    இந்த DC வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எனது குழுவுடன் இணைந்து அனைத்து வகையிலும் தரமாகவும், சிறப்பாகவும் எடுத்து வருகிறோம். இது நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு புது வகையான சில்லிடும் ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்தகட்ட தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’வை முந்தி ‘கூலி’ முதலிடம்!

    August 14, 2025
    சினிமா

    ‘கூலி’ விமர்சனம்: ரஜினி – லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி?

    August 14, 2025
    சினிமா

    நடிகர் நிவின் பாலி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

    August 14, 2025
    சினிமா

    பிரபாஸ் படத்துக்குச் சிக்கல்

    August 14, 2025
    சினிமா

    விளையாட்டு செயலி விளம்பர வழக்கு: அமலாக்கத் துறை முன் நடிகை லட்சுமி மன்சு ஆஜர்

    August 14, 2025
    சினிமா

    ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் கனடா தமிழர்

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’வை முந்தி ‘கூலி’ முதலிடம்!
    • தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு
    • தசை வளர்ச்சி மற்றும் மீட்டெடுப்பை அதிகரிக்கக்கூடிய 5 இயற்கை சப்ளிமெண்ட்ஸ் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு
    • ஏர்போட்கள் காரணமாக சமூக ஊடக பயனர் தனது விசாரணையின் ஒரு பகுதியை இழக்கிறார்; நீண்டகால பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கைகள்; ‘நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் ….’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.