Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு
    உலகம்

    ‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

    தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள்தான். அது நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய அணுசக்தி பேரழிவாக மாறி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

    ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்பவர்கள், அணு ஆயுத பயன்பாடு கொண்டவர்களுடன் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த இரு நாட்டு தலைவர்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த பணியை செம்மையாக செய்த அமெரிக்க அரசு அதிகாரிகள், நிர்வாகிகளை பாராட்டுகிறேன். உலக அளவிலான மோதலை அமெரிக்கா தனது தலைமை பண்பு மற்றும் ராணுவ சக்தியால் தடுத்துள்ளது.” என்றார்.

    கடந்த 13-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் தரப்பினர் ஒன்றாக இணைந்து இரவு உணவு சாப்பிடும் நாள் வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

    பஹல்கம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மேற்கொண்டது. அதை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பும், ராணுவமும் முறியடித்தது. அதன் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியா – பாக். போர் நிறுத்தம் குறித்த முதலில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்பதால் அது குறித்து மத்திய அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வாருகின்றன. இந்தச் சூழலில் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 

    December 1, 2025
    உலகம்

    லிண்ட்சே ஹாலிகன் யார்? மிஸ் கொலராடோ இறுதிப் போட்டியிலிருந்து கோமி மீது வழக்குத் தொடர டிரம்பின் ‘பொம்மை’ என்று அழைக்கப்படுவது வரை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்

    December 1, 2025
    உலகம்

    இந்த நன்றி செலுத்தி பறக்கிறதா? ஏறக்குறைய 18 மில்லியன் பயணிகள் விமான நிலையங்களுக்கு வருவதால் உங்களுக்கு உண்மையில் தேவைப்படும் TSA குறிப்புகள் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    உலகம்

    அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

    December 1, 2025
    உலகம்

    FBI காஷ் படேலின் காதலிக்கு SWAT பாதுகாப்பைப் பயன்படுத்துவதைப் பாதுகாக்கிறது, அவர் ‘நூற்றுக்கணக்கான நம்பகமான அச்சுறுத்தல்களை’ எதிர்கொண்டதாகக் கூறுகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
    • கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு
    • சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல்
    • பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 
    • சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.