Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு
    தேசியம்

    நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

    adminBy adminMay 31, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹைத​ரா​பாத்: உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும். உரங்​கள் நெல்​லுக்கு தேவையான ஊட்​டச்சத்​துக்​களை வழங்​கு​கின்​றன. உறை கரு​கல் நோயை ஆரம்​பத்​திலேயே கண்டு பிடித்து தடுக்​கா​விட்​டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்​கப்​படும் என்​கிறது விவ​சா​யத் துறை. இதற்கு தீர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், பிஏஎஸ்​எப் நிறு​வனம் தனது மும்​பை, புனே ஆய்​வகங்​களில் தொடர்ச்​சி​யாக நடத்​திய ஆய்​வில் புதிய ரசாயன திர​வங்​களை கண்​டு​பிடித்​துள்​ளது.

    இதுகுறித்​து, பிஏஎஸ்​எப் தெற்​காசிய நிர்​வாக இயக்​குநர்​கள் குழு​வின் உறுப்​பினர் மைக் ஹெய்ன்​ஸ், மூத்த துணைத் தலை​வர்​கள் மார்கோ க்ரோஸ்​டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்​எப் இந்​தியா நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அலெக்​சாண்​டர் கெர்​டிங், பிஏஎஸ்​எப் இந்​தி​யா​வுக்​கான வேளாண் தீர்​வு​கள் பிரி​வின் வணிக இயக்​குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற புதிய ரசாயன திர​வங்​களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளி​யிட்ட​னர். பின்னர் அவர்கள் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 130 ஆண்​டு​களுக்​கும் மேலாக விவ​சா​யத்​துறை​யுடன் இணைந்து செயல்​படும் எங்​களது பிஏஎஸ்​எப் என்ற பிரபல ரசாயன உற்​பத்தி நிறு​வனம், ‘வேலெக்​சி​யோ’ மற்​றும் ‘மிபிலி​யா’ என்ற இரண்டு நவீன ரசாயன திர​வங்​களை வெளி​யிட்​டுள்​ளது.

    இந்​தி​யா​விலேயே கண்​டு​பிடிக்​கப்​பட்ட ‘வேலெக்​சி​யோ’ என்ற பூச்​சிக்​கொல்லி திரவம், தாவரங்​களின் முழு வளர்ச்​சி​யை​யும், அறு​வடை காலம்​வரை பூச்​சிகளிட​மிருந்து முழு பாது​காப்​பை​யும் வழங்​கும் பிரெக்​ஸியோ ஆற்​றல் கொண்​ட​தாக இருக்​கும். அதே​போல ‘மிபிலி​யா’ என்ற பூஞ்​சாணக்​கொல்​லி, ரெவி​சால் ரசாயனத்​தில் முதன்​மை​யானது. இந்​திய சுற்​றுச்​சூழலுக்கு ஏற்ப நெல் பயிர்​களுக்கு முழு​மை​யான வளர்ச்​சி​யும், பூஞ்​சாண நோயி​லிருந்து பாது​காப்​பும் வழங்​கு​கிறது.

    இதுதொடர்​பாக நாங்​கள் நடத்​திய ஆய்​வு​களில், வேலெக்​சியோ மூலம் நெல் பயிர்​களுக்கு மிகச் சிறப்​பான வளர்ச்சி கிடைப்​பது உறுதி ஆனது. லெக்​சியோ தெளிக்​கப்​பட்ட நெல் வயல்​களில் பயிர்​கள் வலு​வான தண்​டு, சிறப்​பான இழை தன்மை வளர்ச்​சி, அடர்த்​தி​யான வேர்​கள் மற்​றும் அகல​மான கொடி (கண்​ணாடி இலை) இலைகளு​டன் வளர்​வ​தால், நெல் விவ​சா​யிகளுக்கு அதிக மகசூல் கிடைக்​கும் என உறு​தி​யளிக்​கிறோம். மேலும், இந்த பூஞ்​சாணக்​கொல்​லி, நெல்​லில் இலை​யுறைக்கரு​கல் நோய் மற்​றும் டர்ட்டி பானிகல் நோய்​களை விரை​வாகக்கட்​டுப்​படுத்​தி, நீண்ட காலத்​திற்​குப் பாது​காப்பு வழங்​கும். இந்த இரு ரசாயன திர​வங்​களும் இந்​தி​யா​வில் நெல் பயிர்​களை பூச்​சிகளின் தாக்​குதலில் இருந்​தும், சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களில் இருந்​தும் பாது​காத்து நெல் உற்​பத்​தியை அதி​கரிக்​கச் செய்​யும் என்​ப​தில் ஐயமில்​லை.

    ‘மேட் இன் இந்​தி​யா’ திட்​டத்​தில் புனே மற்​றும் மும்​பை​யில் உள்ள ஆய்​வகத்​தில் தயாரிக்​கப்​பட்ட வேலெக்​சி​யோ, உலக சந்​தை​யிலும் கால் பதிக்​கிறது. நெல் பயி​ரில் நோய் தாக்​குதலை தடுக்​கா​விட்​டால், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்​படலாம். அதனால், விவ​சா​யிகளின் தேவைக்கு ஏற்ப இந்த பரு​வத்​தில், நெல் நடவு தொடங்​கும் போது, வேலெக்​சியோ பூச்​சிக்​கொல்லி மற்​றும் மிபிலியா பூஞ்​சாணக்​கொல்லி ஆகியவை ஜூன் மாதத்​திலிருந்து சந்​தை​யில் கிடைக்​கும், என்​றனர்.

    விலை விவரம்: ‘வேலெக்​சி​யோ’ 60 மிலி கொண்ட ரசாயன திர​வத்​தின் விலை ரூ.1,755. இது ஒரு ஏக்​கருக்கு போது​மான​தாக இருக்​கும். 120 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ.3,360. அதே​போல, 300 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ. 7,920. ஒரு ஏக்​கர் நெல் பயிருக்கு தேவை​யான மிபிலியா திர​வத்​தின் 120 மிலி விலை ரூ.1,092. அதே​நேரத்​தில் 360 மிலி கொண்ட திர​வத்​தின் விலை ரூ.3,096.உலகில் நெல் உற்​பத்தி செய்​யும் நாடு​களில் இந்​தியா மிகப்​பெரிய பங்கு வகிக்​கிறது. குறிப்​பாக, ஒவ்​வொரு ஆண்​டும் 100 மில்​லியன் மெட்​ரிக் டன்​களுக்கு மேல், அதாவது உலக நெல் வர்த்​தகத்​தில் 40 சதவீத பங்​களிப்​புடன் முக்​கிய இடத்தை பெற்​றுள்​ளது.

    சீனா​வில் ஒரு ஹெக்​டேரில் 7 டன் நெல் அறு​வடை செய்​யப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இது 4.2 டன்​னாக மட்​டுமே உள்​ளது. இதனால், இந்​திய நெல் விவ​சா​யிகளுக்​கு, நோய் தடுப்பு திரவங்கள் அவசி​யம் தேவை என்​பதை உணர்ந்​த​தால், பல்​வேறு ஆராய்ச்​சிகளின் அடிப்​படை​யில் இந்த இரண்டு ரசாயன திர​வங்​களும் தயாரிக்​கப்​பட்​டுள்ளன என்​கிறது பிஏஎஸ்​எப்.

    தமிழகத்​தில் உற்​பத்தி குறைந்​தது: தமிழகத்​தில் காவிரி டெல்டா மாவட்​டங்​களில் சுமார் 18 லட்​சம் ஏக்​கரிலும், காவிரி டெல்டா அல்​லாத மாவட்​டங்​களில் சுமார் 34 லட்​சம் ஏக்​கரிலும் நெல் பயி​ரிடப்​படு​கிறது.2023-24 காலாண்​டில், தமிழ்​நாட்​டின் நெல் விளைச்​சல், தேசிய சராசரியை விட (2.74 டன்​/ஹெக்​டேர்) குறை​வாக, 2.31 டன்​/ஹெக்​டேர் ஆக பதி​வாகி​யுள்​ளது.இதற்கு பல்​வேறு காரணி​களை விவ​சா​யத் துறை தெரி​வித்​துள்​ளது. 2024 – ம் ஆண்​டில், காவிரி டெல்டா பகு​தி​யில் நீர் பற்​றாக்​குறை காரண​மாக சாம்பா பயிரின் விளைச்​சல் 40% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    – ஹைத​ரா​பாத்​தில் இருந்து எஸ்.அருள்மொழிச் செல்​வன்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

    July 1, 2025
    தேசியம்

    தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

    July 1, 2025
    தேசியம்

    பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    June 30, 2025
    தேசியம்

    நுகர்வு கலாசாரம் கற்பனை செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: திரவுபதி முர்மு பேச்சு

    June 30, 2025
    தேசியம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்

    June 30, 2025
    தேசியம்

    மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்
    • ரோஸ்மேரி வாட்டர் Vs ரோஸ்மேரி எண்ணெய்: முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
    • வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்
    • பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி
    • பளபளப்புக்குப் பின்னால்: போடோக்ஸ், குளுதாதயோன் மற்றும் வயதான எதிர்ப்பு மருந்துகளின் சொல்லப்படாத அபாயங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.