Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
    தேசியம்

    இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

    adminBy adminMay 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அகமதாபாத்: இந்​தி​யா​வின் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். குஜ​ராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் ரூ.5,536 கோடி மதிப்​பிலான அரசு நலத் திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

    சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்​டது. அந்த பகு​தியை மீட்க சர்​தார் படேல் திட்​ட​மிட்​டார். ஆனால் அவரது திட்​டம், அறி​வுரை ஏற்​கப்​பட​வில்​லை. இதன்​ காரண​மாக கடந்த 75 ஆண்​டு​களுக்​கும் மேலாக எல்லை தாண்​டிய தீவிர​வாத பிரச்​சினையை எதிர்​கொண்டு வரு​கிறோம்.

    இந்​தி​யா​வுடன் நேரடி போரில் வெற்றி பெற முடி​யாது என்​பது பாகிஸ்​தானுக்கு நன்​றாக தெரி​யும். இதன்​காரண​மாக தீவிர​வாதம் மூலம் அந்த நாடு மறை​முக போரில் ஈடு​பட்டு வரு​கிறது. பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​பட்ட 9 தீவிர​வாத முகாம்​களை இந்​திய ராணுவம் 22 நிமிடங்​களில் அழித்​தது.

    இந்த ராணுவ நடவடிக்கை வீடியோ​வில் பதிவு செய்​யப்​பட்​டது. கடந்த காலங்​களில் பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் அழிக்​கப்​பட்​டதற்​கான ஆதா​ரங்​கள் கோரப்​பட்​டன. இப்​போது பகிரங்​க​மாக வீடியோ ஆதா​ரங்​களை வெளி​யிட்டு உள்​ளோம். இந்​திய ராணுவத்​தின் துல்​லிய தாக்​குதல்​களில் உயி​ரிழந்த தீவிர​வா​தி​களுக்கு பாகிஸ்​தான் ராணுவம் மரி​யாதை செலுத்​தி​யது. இதன்​மூலம் அந்த நாட்​டின் உண்மை முகம் அம்​பல​மாகி உள்​ளது.

    சிந்து நதி நீர் ஒப்​பந்​தம்: 1960-ல் சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்​டது. இந்​தி​யா​வில் சிந்து நதி கட்​டமைப்​பு​களில் கட்​டப்​பட்ட அணை​கள் முறை​யாக தூர்​வாரப்​பட​வில்​லை. இப்​போது அணை​களை தூர்​வாரி நீர் இருப்பை அதி​கரித்து வரு​கிறோம். பாகிஸ்​தானுக்கு எதி​ராக இது​வரை நாம் எந்​தவொரு உறு​தி​யான நடவடிக்​கைகளை​யும் எடுக்​க​வில்​லை. ஆனால் அந்த நாடு இப்​போதே அச்​சத்​தில் வியர்த்து நடுங்கி கொண்​டிருக்​கிறது.

    2014 மே 26-ம் தேதி பிரதம​ராக நான் பதவி​யேற்​றேன். அப்​போது உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​கள் பட்​டியலில் இந்​தியா 11-வது இடத்​தில் இருந்​தது. எனது ஆட்​சிக் காலத்​தில் கரோனா பெருந்​தொற்​று, இயற்கை பேரிடர்​கள், அண்டை நாடு​களு​டன் பல்​வேறு பிரச்​சினை​கள் எழுந்​தன. கரோ​னா​வுக்கு எதி​ரான போரில் வெற்றி பெற்​றோம். இயற்கை பேரிடர்​களை திறம்பட எதிர்​கொண்​டோம்.

    அண்டை நாடு​களுடனான பிரச்​சினை​களுக்கு ராஜ்ஜியரீதியில் தீர்வு காணப்​பட்​டது. கரோனா பெருந்​தொற்று காலத்​தி​லும் நாட்​டின் பொருளா​தா​ரத்​தில் அதிதீ​விர கவனம் செலுத்​தப்​பட்​டது. இதன்​காரண​மாக உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​கள் பட்​டியலில் தற்​போது 4-வது இடத்​துக்கு இந்​தியா முன்​னேறி உள்​ளது. விரை​வில் 3-வது இடத்தை எட்​டிப் பிடிக்க தீவிர நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறோம். வரும் 2047-ம் ஆண்​டில் 100-வது சுதந்​திர தினத்தை கொண்​டாடு​வோம். அப்​போது வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம்.

    சீன விநாயகர் சிலைகள்: இந்​திய பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த ஒவ்​வொரு இந்​தி​யரும் உள்​நாட்டு தயாரிப்​பு​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு​வரும் அன்​றாடம் பயன்​படுத்​தும் பொருட்​கள் குறித்து ஆய்வு செய்ய வேண்​டும். அதில் அந்​நிய பொருட்​களை தவிர்க்க வேண்​டும். அதற்கு மாற்​றாக உள்​நாட்டு தயாரிப்​பு​களை வாங்க வேண்​டும். வெளி​நாட்​டில் (சீ​னா​வில் ) இருந்து விநாயகர் சிலைகள் இறக்​குமதி செய்​யப்​படு​கின்​றன. ஹோலி பண்​டிகை​யில் பயன்​படுத்​தப்​படும் வண்ண பொடிகளும் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. இது மிக​வும் துர​திருஷ்டவசமானது.

    இதை முற்​றி​லும் தவிர்க்க வேண்​டும். இந்​திய தயாரிப்​பு​களை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும். வெளி​நாட்டு பொருட்​களை விற்க மாட்​டோம் என்று வியா​பாரி​கள் உறு​தி​யேற்க வேண்​டும். உள்​நாட்​டில் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களை உலகத் தரத்​தில் தயாரிக்க வேண்​டும். பொருட்​களின் தரத்​தில் இந்​திய நிறு​வனங்​கள் அதிக அக்​கறை செலுத்த வேண்​டும்.

    கடந்த 75 ஆண்​டு​களுக்கு முன்பு மகா​ராஷ்டி​ரா​வில் இருந்து குஜ​ராத் தனி​யாகப் பிரிக்​கப்​பட்​டது. அப்​போது குஜ​ராத் பின்​தங்​கிய நிலை​யில் இருந்​தது. கனிம வளம் இல்​லாத இந்த மாநிலம் எப்​படி முன்​னேறும் என்று சிலர் கேள்வி எழுப்​பினர். இப்​போது உப்பு முதல் வைரங்கள் வரை குஜ​ராத்​தில் உற்​பத்தி செய்​யப்படு​கின்றன. குஜ​ராத்​தின் வளர்​ச்​சியை ​பார்​த்​து ஒட்​டுமொத்​த உலக​மும்​ வியப்​பில்​ ஆழ்​ந்​திருக்​கிறது. வரும்​ 2036-ம்​ ஆண்​டில்​ இந்​தி​யா​வில்​ ஒலிம்​பிக்​ போட்​டிகளை நடத்​த திட்​ட​மிட்​டு உள்​ளோம்​. இந்​த போட்​டிகள்​ குஜ​ராத்​தில்​ நடத்​தப்​படும்​. இவ்​​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 2, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2-வது டெஸ்டில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா இந்திய அணி?
    • தமிழகத்தில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம்? – மக்கள் அதிர்ச்சி; கடும் நடவடிக்கை எடுக்க செயற்பாட்டாளர்கள் கோரிக்கை
    • 100 நாள் சவாலை நிறைவேற்றிய 4,552 அரசு பள்ளிகளுக்கு பாராட்டு: தலைமை ஆசிரியர்களுக்கு திருச்சியில் விழா
    • இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் 7 பேர் கைது
    • காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.