Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழைய புத்தகக் கடை போல செயல்படும் அரசு நூலகங்கள்: தமிழக பாஜக விமர்சனம்
    மாநிலம்

    பழைய புத்தகக் கடை போல செயல்படும் அரசு நூலகங்கள்: தமிழக பாஜக விமர்சனம்

    adminBy adminMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழைய புத்தகக் கடை போல செயல்படும் அரசு நூலகங்கள்: தமிழக பாஜக விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பழைய புத்தகக் கடை போல அரசு நூலகங்கள் செயல்படுவதாக தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க ஆட்சி என்றாலே ஏதோ கல்விக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற மாயை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாயை இப்போது நூலகத் துறைக்குள் நடக்கும் நாடகங்களால் உடைபட்டு வருகிறது.

    தி.மு.க ஆட்சி அமைந்த 2021 -22, 2022 – 23 ஆண்டுகளில் வெளிவந்த புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரி பிரதிகள் கூட இதுவரை பெறப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரிகள் பெற வேண்டும். ஆனால் இப்போது வரை நூலகத்துறை எதையும் வாங்கியதாக தகவல் இல்லை.

    கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் பெரும்பாலான நூலகங்கள் பழைய புத்தகக் கடைகளை போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன’ என்பதுதான் திமுகவின் நான்காண்டு கால நல்லாட்சிக்கு அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்புலத்தில் வெளியாகும் ’புதிய புத்தகம் பேசுது’ தலையங்கம் அளித்திருக்கும் பாராட்டு சான்று.

    குறிப்பாக முதல்வருக்கு தனது தந்தை கருணாநிதி பெயரில் பிரம்மாண்ட நூலகக் கட்டிடங்கள் கட்டுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர, கிராமப்புற் மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண நூலகங்கள் மீது இல்லை. கூட்டணிக் கட்சிகளின் அதிகாரபூர்வ இதழ் போன்ற அரசியல் திணிப்புகள்தான் நூலகங்களில் செய்யப்படுகிறதே தவிர, கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான நூல்கள் அல்ல. மேலும், நூலகங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. நூலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் பணியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.

    தமிழகத்தின் நான்கைந்து இடங்களில் கோடிகளைக் கொட்டி பிரம்மாண்டக் கட்டிடங்களை காட்சிப்படுத்திவிட்டு, ஆயிரக்கணக்கான நூலகங்களை அம்போவென கைவிட்டிருக்கிறது திமுக ஆட்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    September 23, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    September 23, 2025
    மாநிலம்

    70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர்: தமிழக மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    September 23, 2025
    மாநிலம்

    காந்தி ஜெயந்தி தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

    September 23, 2025
    மாநிலம்

    தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன?

    September 23, 2025
    மாநிலம்

    ‘சென்னை ஒன்’ செயலி – பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோவில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்!

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • சிறுநீரக ஆரோக்கியம்: பொதுவாக நுகரப்படும் 5 இளையவர்களில் சிறுநீரக செயலிழப்பில் கூர்மையான அதிகரிப்பு ஏற்படுகிறது
    • அழற்சி உணவுகள்: தினமும் வீக்கத்தைத் தூண்டும் 7 உணவுகள் மற்றும் அதற்கு பதிலாக என்ன சாப்பிட வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள்: புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்கள் புறக்கணிக்கக்கூடாது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.