Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்
    மாநிலம்

    தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘அறிஞர்கள் அவையம்’ நிகழ்வின் தொடக்கவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, ‘அறிஞர்கள் அவையம்’ திட்டத்தின் பிரத்யேக இலச்சினையை அறிமுகப்படுத்தி திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் மொழி மற்றும் அதன் சிறப்புகளை அனைத்து துறைகளிலும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் வல்லுநர்களின் கருத்துகளை பெற்று திட்டங்களாக நிறைவேற்ற உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற திட்டத்தின் வழியாக நடத்தப்படும் என்று, சட்டப் பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஒரே மாதத்தில் செயல்வடிவம் பெற்றுள்ளது.

    தமிழ் அறிஞர்களின் அனுபவங்களை ஒன்றுதிரட்டி தமிழை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் தாய்மொழி பற்று குறைந்துவிடுமோ என்ற ஏக்கம் நிலவுகிறது. இந்தச் சூழலில் தமிழ் உணர்வு மேலும் நிலைபெற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் நோக்கத்தை தமிழ் அறிஞர்கள் கலந்தாய்வு திட்டம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

    உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, “எங்கள் நிறுவனம் சார்பில் அறிஞர்கள் அவையம், தொல்காப்பியர் சுழலரங்கம் ஆகிய 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அறிஞர்கள் அவையம் திட்டத்தில் மாதம் ஒரு நிகழ்வு என மொத்தம் 12 நிகழ்வுகள் நடத்தப்படும். வெறுமனோ பேசினோம், கலைந்தோம் என்றில்லாமல் நடைமுறை சார்ந்த செயல்திட்டமாக இந்நிகழ்ச்சி அமையும். ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டும் குழுக்கள் அமைக்கப்படும். இன்றைய செயற்கை நுணணறிவு உலகில் தமிழ்மொழியை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லலாம்? என்பது குறித்து ஆராயப்படும்” என்றார்.

    இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்வாக ‘தமிழ் அகராதியியல்’ என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்றது. இதில் தமிழறிஞர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள், தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எடுத்துரைத்தனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதித்துறையின் செயலரும், தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் தலைவருமான த.உதயசந்திரன் நிறைவுரை ஆற்றினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்

    July 4, 2025
    மாநிலம்

    சிபிசிஐடி விசாரணைதான் வேண்டும்: அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார்

    July 4, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய தவெக மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    July 4, 2025
    மாநிலம்

    லாக்-அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு வலியுறுத்தல்

    July 4, 2025
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?

    July 4, 2025
    மாநிலம்

    சென்​னை, புறநகரில் மிதமான மழை

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்களுக்கு தேவை என்று உங்களுக்குத் தெரியாத சிறந்த வெண்ணெய் ஹேக் – அவற்றை நாட்களுக்கு புதியதாக வைத்திருக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்: இருவருக்கு தொற்று உறுதி
    • ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தது… – ஜீத்து ஜோசப் பகிர்வு
    • புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்
    • ஒரு செல்லப்பிராணி பீகல் நாய்க்குட்டியைப் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.