Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘அடுத்த 7 மாதங்கள் முழுவீச்சில் களப்பணி’ – கட்சியினருக்கு செந்தில்பாலாஜி உத்தரவு
    மாநிலம்

    ‘அடுத்த 7 மாதங்கள் முழுவீச்சில் களப்பணி’ – கட்சியினருக்கு செந்தில்பாலாஜி உத்தரவு

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அடுத்த 7 மாதங்கள் முழுவீச்சில் களப்பணி’ – கட்சியினருக்கு செந்தில்பாலாஜி உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: “அடுத்த 7 மாதங்களில் கட்சியினர் முழுமையாக களப்பணியாற்றியிருக்க வேண்டும்,” என திருப்பூரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்த கூட்டத்தில் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ல் திமுகவும், 5-ல் அதிமுகவும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றன. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார்.

    இதையடுத்து திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருப்பூரில் இன்று (மே 29) பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

    இதில் திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி தொகுதிகளில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், வாக்காளர்களை பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது: குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்துக்குள் திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த வாக்குச்சாவடிகளில் கடந்த தேர்தலில் நம் வாக்குகள் சரிந்துள்ளன? அவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடர்ந்து கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும்.

    அதேபோல் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் பகுதியில் வாக்கு வங்கியை உயர்த்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக, பாஜக எந்தெந்த வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளன? அங்கு நம்மால் ஏன் பெறமுடியவில்லை என்பது தொடர்பான தரவுகளை கையில் வைத்து கட்சியினர் பணியாற்ற வேண்டும். இன்னும் 7 மாதங்களுக்குள் பலவீனமான அனைத்து பகுதிகளிலும் களப்பணியை கட்சியினர் ஆற்றியிருக்க வேண்டும்.

    அதேபோல் பூத் வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து மைக்ரோ லெவலில் கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும். பலவீனமான பகுதிகளில், அரசின் நலத்திட்டங்கள் மக்களை எந்தளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதையும் சரிபார்க்க வேண்டும்.” என்று அவர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக சேர்மனை வீட்டுக்கு அனுப்பிய திமுக… அந்த இடத்தைப் பிடிக்க ஆயத்தமாகும் அதிமுக! – மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து?

    July 5, 2025
    மாநிலம்

    அத்திப்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே ரூ.365 கோடியில் 3, 4-வது பாதை அமைக்க ஒப்புதல்

    July 5, 2025
    மாநிலம்

    சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்; 2 பேர் காயம்

    July 5, 2025
    மாநிலம்

    “உயரதிகாரிகள் கூறியதாக அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்துச் சென்றனர்” – அரசு மருத்துவர் சாட்சியம்

    July 5, 2025
    மாநிலம்

    அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் கைது

    July 5, 2025
    மாநிலம்

    இரட்டை இலை விவகாரத்தில் காலநிர்ணயம் செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பாபநாசம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ரஜினிகாந்த்: இயக்குநர் ஜீத்து ஜோசப் தகவல்
    • திமுக சேர்மனை வீட்டுக்கு அனுப்பிய திமுக… அந்த இடத்தைப் பிடிக்க ஆயத்தமாகும் அதிமுக! – மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து?
    • ஹார்வர்ட் நரம்பியல் விஞ்ஞானி: ஹார்வர்ட் நரம்பியல் விஞ்ஞானியின் கூற்றுப்படி, சிறந்த மூளைக்கு 3 பிஸ்ஸேர் ஹேக்குகள்
    • பிஹாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் படம்
    • பறந்து போ: திரை விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.