Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜூன் மாதம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: திரிணமூல் கோரிக்கை
    தேசியம்

    ஜூன் மாதம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: திரிணமூல் கோரிக்கை

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜூன் மாதம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: திரிணமூல் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும்.

    இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக நின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பப்பட்டிருக்கும் தூதுக்குழுக்களையும் ஆதரித்தது. அரசுக்கு எங்களின் முழு ஆதரவினை வழங்கியிருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இப்போது, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் எழுப்பிய ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக ஜுன் மாதத்தில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.” என்றார்.

    திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரக் ஓ பிரேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவுக்கு எதிராக போராடும் கட்சிகளாகிய நாங்கள், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்றார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத நிலைகளின் மீது ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியா துல்லிய தாக்குகல் நடத்தியது. இந்தியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து மே 8, 9 மற்றும் 10 தேதிகளில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

    இதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை விளக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், முக்கிய நட்பு நாடுகளுக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

    இந்த அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுக்களுக்கு, பாஜகவைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், திமுகவின் கனிமொழி, என்சிபி (சரத் பவார் அணி) யின் சுப்ரியா சுலே ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

    இந்த ஏழு அனைத்துக்கட்சி குழுக்கள் 32 நாடுகளுக்கு பயணப்பட்டு வருகின்றன. இதில் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழுவில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி இடம் பெற்றுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

    July 5, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழைக்கு இதுவரை 69 பேர் உயிரிழப்பு: ரூ.700 கோடிக்கு உள்கட்டமைப்புகள் சேதம்

    July 5, 2025
    தேசியம்

    பிஹாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் படம்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • அமெரிக்காவின் சிறந்த மருத்துவர் பொதுவான பழக்கவழக்கங்களை எச்சரிக்கிறார், அவை அமைதியாக குடலுக்கு தீங்கு விளைவிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்: இபிஎஸ் அறிவிப்பு
    • புற்றுநோய்க்கு பிந்தைய உடற்பயிற்சி திட்டம் மரணம் மற்றும் மறுநிகழ்வு விகிதங்களைக் குறைக்கிறது, ஒரு ஆய்வின்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளி அடக்கம் தவறானது: 166 பேரின் எச்சங்கள் மற்றும் கஞ்சா விதைகள் பசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளாகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.