Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல்
    மாநிலம்

    முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    முட்டுக்காடு: சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கர் பரப்பளவில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (மே 29) நடைபெற்றது.

    சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 37.99 ஏக்கர் பரப்பளவில் வெளிநாடுகளில் உள்ளது போன்ற கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த 525 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் 10,000 பேர் ஒரே நேரத்தில் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம், 5,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான மாநாட்டுக் கூடம், பல்வேறு சிற்றரங்கங்கள், திறந்தவெளி அரங்குகள், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் இந்த அரங்கம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்.

    இந்த அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (மே 29) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் ஐந்து லட்சம் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 525 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

    குறிப்பாக, உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமையவுள்ளது. 18 மாதம் அரங்கம் கட்ட இலக்கு நிர்யிக்கப்பட்டுள்ளது. அதற்கு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது 30 ஏக்கர் நிலத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலம் கோயில் நிலம் என்பதால் சற்று சட்ட சிக்கல் உள்ளது. விரைவில் அந்த இடமும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதய வர்மன், திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜ், பொதுப்பணித்துறையின் மண்டல தலைமை செயற்பொறியாளர் கண்ணன் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர்சங்கீதா, ஆகியோர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

    July 5, 2025
    மாநிலம்

    திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி – செயற்குழுக் கூட்டத்தில் விஜய் உறுதி

    July 5, 2025
    மாநிலம்

    எங்களுக்குத் தெரியாம நடந்துருச்சு… இருந்தாலும் தப்புத்தான்! – ஆபாச நடன சர்ச்சையில் ஆற்காடு நகர அதிமுக

    July 5, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: 4-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை; டிஎஸ்பி நேரில் ஆஜர்

    July 5, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்குவது எப்போது? – விடை தெரியாத கேள்விகளும் சிக்கல்களும்

    July 5, 2025
    மாநிலம்

    கோவை: மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற தமிழ்நாடு அனைத்து தொழில் அமைப்புகள் கோரிக்கை

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்
    • பெண்களுக்கு 5 சிறந்த குடல் நட்பு உணவுகள்
    • ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்
    • திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி – செயற்குழுக் கூட்டத்தில் விஜய் உறுதி
    • 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்: டொனால்ட் ட்ரம்ப்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.