Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனியார் சாய ஆலையில் கழிவு அகற்றுவது மாநகராட்சி ஒப்பந்த வாகனமா? – திருப்பூரில் நீதிபதி குழு அதிர்ச்சி
    மாநிலம்

    தனியார் சாய ஆலையில் கழிவு அகற்றுவது மாநகராட்சி ஒப்பந்த வாகனமா? – திருப்பூரில் நீதிபதி குழு அதிர்ச்சி

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனியார் சாய ஆலையில் கழிவு அகற்றுவது மாநகராட்சி ஒப்பந்த வாகனமா? – திருப்பூரில் நீதிபதி குழு அதிர்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: கரைப்புதூர் சாய ஆலையில் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டது திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த வாகனமா என ஆய்வுக்கு வந்த நீதிபதி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையில் உள்ள மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணு கோபால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு சாய ஆலை தரப்பில் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவா் நீதியரசா் தமிழ்வாணன் தலைமையில் கடந்த 26-ம் தேதி ஆய்வு செய்தனர். இதில் ஆணைய உறுப்பினர்கள் செல்வ குமார், ஆனந்த ராஜா, பொன்தோஸ், ரேகா பிரியதா்ஷினி மற்றும் தூய்மை பணியாளா்கள் நல வாரிய முதன்மை அலுவலா் கோவிந்த ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்தை வழங்கினர்.

    தொடர்ந்து குழுவினர் சாய ஆலையில் ஆய்வு செய்த போது, மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் தனியார் வாகனம் என்ற போதிலும், அது மாநகராட்சி ஒப்பந்த வாகனம் என்பதால், ’திருப்பூர் மாநகராட்சி பணி’க்கானது என்பதை வாகனத்தின் முகப்பிலேயே பெரியதாக குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம், குழுவினர் கேட்டபோது, அவர்கள் அளித்த மழுப்பலான பதிலால் அதிருப்தி அடைந்ததனர்.

    இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த பணியை மேற்கொள்ளும் வாகனம் என்றாலும், திருப்பூர் மாநகராட்சி பணி என்பதை பெரியதாக வாகனத்தில் முகப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்று திருப்பூர் மாநகரில் ஏராளமான வாகனங்கள் உலா வரலாம் என தெரிய வருகிறது. மாநகராட்சி வாகனம் என்றாலும், சம்பவம் நிகழ்ந்தது புறநகர் பகுதி. மாநகராட்சியில் ஒப்பந்த வேலை செய்தாலும், இப்படி பல வாகனங்கள் வலம் வருவதால், தொழில்துறை பகுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடைபெறலாம் என சந்தேகிக்கிறோம்.

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இன்றைக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் வருத்தத்தை உண்டாக்குகின்றன. இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சியிலும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவை அகற்றும் பணிக்கு சென்ற, மாநகராட்சியின் ஒப்பந்த வாகனத்தின் முன்பாகம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இது போன்ற வாகனங்கள் மாநகராட்சியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சாலையில் ஓடுவதும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்து தான்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராம மூர்த்தி கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சியின் ஒப்பந்த வாகனம் இல்லை. ஆனால் மாநகராட்சி யின் ஒப்பந்த பணி வாகனம் என வாகன முகப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்று இருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன உரிமையாளரான சின்னச்சாமிக்கும், மாநகராட்சி பணிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க, ஒப்பந்த வாகனங்களின் முகப்பில் தெரியாதபடி இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

    இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்வதற்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு கருவிகள் அல்லது உபகரணங்கள் இல்லாமல் அபாயகரமான சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

    September 16, 2025
    மாநிலம்

    மதிமுக தவிர்க்க முடியாத சக்தி என நிரூபித்து அங்கீகாரம் பெறுவோம்: துரை வைகோ உறுதி

    September 16, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி முதல் தமிழ் ஈழம் வரை: மதிமுக மாநாட்டு தீர்மானங்கள் என்னென்ன?

    September 16, 2025
    மாநிலம்

    “ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் கொந்தளித்த பிரேமலதா

    September 16, 2025
    மாநிலம்

    கொலை முயற்சி வழக்கில் கைதான ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    September 16, 2025
    மாநிலம்

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விண்வெளியில் இருந்து பிடிபட்டது: பசிபிக் சுனாமி நிலச்சரிவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நாசாவின் கார்டியன் அமைப்பு எச்சரித்தது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொல்கத்தாவில் போராட்டம்
    • காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்
    • முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
    • வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.