Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு
    உலகம்

    ‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகு: மே 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார்.

    “இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். மே 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்” என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அஜர்பைஜானில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் முன்னிலையில் இதை அவர் தெரிவித்திருந்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கி இருந்தன.

    முன்னதாக, காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்.

    ஆனால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா முயன்றால், நமது நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாமும் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நாங்கள் காட்டுவோம்.

    பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி எங்கள் இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய அமைதி மற்றும் செழிப்புக்கும் பங்களிக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

    ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.

    ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இறுதியில் பாகிஸ்தான் மூத்த தளபதி நேரடியாக இந்திய ராணுவ மூத்த தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

    July 16, 2025
    உலகம்

    ‘ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்…’ – இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ எச்சரிக்கை

    July 16, 2025
    உலகம்

    உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

    July 16, 2025
    உலகம்

    இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சாதனை: 18 நாட்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்

    July 16, 2025
    உலகம்

    யேமனில் கேரள செவிலியருக்கு நிவாரணம்: நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டது – என்ன இருந்தது | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 15, 2025
    உலகம்

    விண்வெளி ஆய்வு நிறைவு – வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா!

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
    • இன்றே கடைசி… திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வெளியூர் பேருந்துகள் ‘பிரியாவிடை’
    • சிறுநீரக கல் எச்சரிக்கை: சிறுநீரக கற்களைத் தூண்டக்கூடிய 10 உணவுகள் மற்றும் அவற்றைத் தடுக்க உதவும் 10 உணவுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எலோன் மஸ்க்கின் செவ்வாய் திட்டம் ஒரு ஆபத்தான மாயை, வானியற்பியலாளர் ஆடம் பெக்கரை எச்சரிக்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.