Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோடை விடுமுறை முடிந்து மக்கள் ஊர் திரும்பும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் குற்றச்சாட்டு
    மாநிலம்

    கோடை விடுமுறை முடிந்து மக்கள் ஊர் திரும்பும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் குற்றச்சாட்டு

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோடை விடுமுறை முடிந்து மக்கள் ஊர் திரும்பும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 5-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் நாளை (மே 30) ஊர் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர்.

    ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் பெரும்பாலானோர் தத்கால் மூலம் பயணச்சீட்டு பெற முயற்சிக்கும் முடிவில் இருக்கின்றனர். மேலும் சிலர் தனியார் பேருந்துகளையும் நாடுகின்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பும் சூழலை பயன்படுத்தி, வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகளில் சென்றால், சுமார் 16 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.

    இதனால், பயண நேரத்தை குறைக்கவே பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளை நாடுகிறோம். தற்போது அதிகபட்சமாக ரூ.3,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் இந்த பிரச்சினை வருகிறது. எனவே, அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வகையிலான வாகனம் என்பதால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதிகபட்ச கட்டணம் உரிமையாளர்கள் சார்பில் நிர்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். அதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை’’ என்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800-425-6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் வசதிக்காக 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு சொகுசு பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு நிறைவடையவில்லை. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கிருஷ்ணகிரி சாலை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: அதிகாரிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 7, 2025
    மாநிலம்

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: அமைச்சர் கோவி.செழியன்

    July 7, 2025
    மாநிலம்

    தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    July 7, 2025
    மாநிலம்

    திமுகவின் துணை அமைப்பா டிஎன்பிஎஸ்சி? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    July 7, 2025
    மாநிலம்

    ‘அதிமுக எப்போதும் விவசாயிகள், மக்களுடன் இருக்கும்’ – தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ் பேச்சு

    July 7, 2025
    மாநிலம்

    மீண்டும் முதல்வர் கனவு… நேரடியாக களத்துக்கு வரும் நாராயணசாமி!

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் கண்டனம் – ட்ரம்ப் பெயர் தவிர்ப்பு!
    • கிருஷ்ணகிரி சாலை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: அதிகாரிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு – ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?
    • கொலாஜன்: வயதானதை தாமதப்படுத்தும் கொலாஜனுக்கான 5 தேசி மாற்றீடுகள்
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: அமைச்சர் கோவி.செழியன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.