Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு
    வணிகம்

    சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதி பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் பல்வேறு நவீன முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி நகர்ப்புற நிதி பத்திரங்கள் மூலம் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 7.97% என நாட்டிலேயே மிக குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.200 கோடிக்கான நகர்ப்புற நிதி பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்த பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்த்தார்.

    இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலர் முருகானந்தம், தேசிய பங்கு சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக், நிதி துறை செயலார் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாக துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்த நிதி பத்திரங்கள் வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, ரூ.100 கோடி அடிப்படை வெளியீட்டு தொகையைவிட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.421 கோடி மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்கு சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டது. இது சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்புக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

    நிதி பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட இந்த நிதி, கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்புக்கு பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ள தடுப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டை நோக்கமாக கொண்ட முக்கியமான உள்கட்டமைப்பு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    தூத்துக்குடியில் உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை சரிவு

    June 30, 2025
    வணிகம்

    ரிப்பேர் பார்க்க ஒப்பந்தம் போடவில்லை: வனத்துறை அலுவலகங்களில் பழுதாகி நிற்கும் இ-பைக்குகள்

    June 30, 2025
    வணிகம்

    தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்தது

    June 30, 2025
    வணிகம்

    இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் உலக சராசரியைவிட மிகவும் குறைவு

    June 30, 2025
    வணிகம்

    சுந்தரம் பைனான்ஸ் நிறுவன வட்டி விகிதங்கள் மாற்றம்

    June 30, 2025
    வணிகம்

    இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எங்கள் எழுதப்படாத சியோல் முடிவு விளக்கியது: மி ரே மற்றும் மி ஜி அவர்களின் புதிய பயணங்களை எவ்வாறு தொடங்கினார்கள் – மற்றும் சீசன் 2 இருக்குமா?
    • மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்
    • திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்
    • லூயிஸ் உய்ட்டன் குரூஸ் வடிவ கடை: லூயிஸ் உய்ட்டன் அதன் ஒரே பயண வடிவ கடையைத் திறந்தது, அதன் இருப்பிடம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
    • அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.