Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பழநியில் 18-ம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டெடுப்பு: உலக நீதிநூலின் மாறுபட்ட பிரதி
    மாநிலம்

    பழநியில் 18-ம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டெடுப்பு: உலக நீதிநூலின் மாறுபட்ட பிரதி

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழநியில் 18-ம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டெடுப்பு: உலக நீதிநூலின் மாறுபட்ட பிரதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பழநியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி அடுத்த நெய்க்காரபட்டி அருகேயுள்ள க.வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்தோம். அப்போது, கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததும் என்பதும், ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பதும் தெரிய வந்தது. ஓலைச் சுவடியின் மேல் ‘ராமக் குடும்பன்’ என்று எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

    இவர் உலக நீதியை பிரதி எடுத்து எழுதியவராகவோ அல்லது ஓலைச்சுவடியின் அந்தக்கால உடமையாளராகவோ இருந்திருக்க வேண்டும். உலகநீதி எனும் நீதி நூலை இயற்றிய உலகநாதர் என்பவர் முருக வழிபாடுடைய சைவப் புலவர். திருவாரூரைச் சேர்ந்தவராக அறியப்படும் இவர் இயற்றிய நீதிபோதனைப் பாடல்கள் ‘உலகநீதி’ எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. 13 விருத்தப் பாடல்களில் இவை 104 வரிகளில் எழுதப்பட்டவை.

    ”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற நீதி நெறி வரியுடன் தொடங்கும் இந்த நூல் இன்னவற்றைச் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையுடன் இறுதி வரிகளில் வள்ளியையும் முருகனையும் போற்றிப் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது கிடைத்துள்ள இந்தச் சுவடியில் உள்ள உலக நீதிப் பாடல்கள், மிகுந்த பாட பேதங்களுடன் உள்ளன. ஏடுகள் மிகவும் சிதைந்து விட்டதால் 8 பாடல்களே கிடைத்துள்ளன. 5 பாடல்கள் கிடைக்கவில்லை. இதில் மூல உலக நீதியில் உள்ள பாடல்களில் இருந்து பல வரிகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. அத்துடன் மூல நூலில் இல்லாத 2 புதிய பாடல்கள் இந்த ஓலைச் சுவடியில் கிடைத்துள்ளன.

    இத்துடன் ‘வேண்டாம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட உலக நீதியில் ‘வேண்டும்’ என்பதை கடமையாகக் கொண்டு கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு கூலி கட்டாயம் தர வேண்டும் என்பது, அழகிய வெண்பா வடிவில் இயற்றப்பட்டு ஒரு ஏட்டில் எழுதப்பட்டுள்ளது. மூல நூலில் இல்லாத, ஆனால் சுவடியில் புதிதாக உள்ள 2 விருத்தப்பாடல்களும் இந்த வெண்பாவும் சுவடியின் உரிமையாளரான ராமக் குடும்பனால் புதிதாக இயற்றப்பட்டு, சேர்க்கப்பட்டவையா என்பதும் தெரியவில்லை.

    மூல நூலில் உள்ள பாடல்களில் முருகனும் வள்ளியும் மட்டும் போற்றிப் புகழப்பட்ட நிலையில் தற்போது கிடைத்த இந்த ஓலைச்சுவடியில் தெய்வானைக் கென்று ஒரு தனிப்பாடல் இயற்றப்பட்டு சேர்க்கப்பட்டு ள்ளது. புதிய செய்தியாக உள்ளது. அத்துடன் மூல நூலில் இல்லாத ஆனால் பாடல் வடிவமற்ற 16 அறிவுரைகளும் இச்சுவடியில் இடம் பெற்றுள்ளன. சிதைந்த ஏடுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்று நாராயணமூர்த்தி கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    உபரி வருவாய் ஈட்டுவதில் குஜராத், உ.பி.யை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

    September 24, 2025
    மாநிலம்

    பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்

    September 24, 2025
    மாநிலம்

    “கனிம கொள்ளையில் ஈடுபடும் திமுகவினர் மீது உதயநிதி நடவடிக்கை எடுப்பாரா?” – ஆர்.பி.உதயகுமார்

    September 24, 2025
    மாநிலம்

    விஜய்க்கு அடிப்படை அரசியலே தெரியவில்லை: சீமான்

    September 24, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளிடம் டெபாசிட்: விதிமுறைகள் வகுக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 50 களில் சகிப்புத்தன்மையை உருவாக்க உதவும் உட்புற நடை முறைகள்
    • ‘ஓஜி’ ரிலீஸுக்காக திரைகளை விட்டுத் தந்த ‘மிராய்’ படக்குழு!
    • சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
    • புகைபிடிப்பதைப் போல தினமும் தூபத்தை எரிக்கிறது: உங்கள் நுரையீரலில் தூப புகையின் விளைவுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உபரி வருவாய் ஈட்டுவதில் குஜராத், உ.பி.யை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.