Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மின்கட்டண உயர்வு; ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்
    மாநிலம்

    மின்கட்டண உயர்வு; ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மின்கட்டண உயர்வு; ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பில் இருந்த வரை ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்த்து வந்தார்.

    அவரது மறைவுக்கு பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் 2017 ஆம் ஆண்டில் உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இதனால் ஒன்றிய அரசின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தை எடப்பாடி அரசு ஏற்படுத்தி விட்டது. அஇஅதிமுகழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வலுவாக எதிர்த்து வந்த உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு கையெழுத்து போட்டு, அவரது கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்து, தமிழ்நாட்டு மக்களின் நலனை அடகு வைத்ததை தமிழ்நாடு ஒரு போதும் மன்னிக்காது.

    உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் ஆண்டுக்கு 6 சதவீதம் அல்லது ஆண்டின் முடிவில் நிலவும் பணவீக்கம் இதில் எது குறைவோ, அந்த அளவில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதன்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றது. இதன் பாதிப்புகள் கடுமையாக ஏற்படுகின்றன.

    ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கையால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் விலைவாசி உயர்ந்து, மக்கள் வாழ்க்கை சுமையை கூட்டி வருகின்றது. கடந்த 2023-ம் ஆண்டு 2.18 சதவீதமும், 2024 ஆம் ஆண்டு 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நிலைக் கட்டணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசியல்வாதிகளின் பேச்சுகளை வேடிக்கை பார்க்க முடியாது: பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

    July 9, 2025
    மாநிலம்

    பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

    July 9, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயரும்

    July 9, 2025
    மாநிலம்

    உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

    July 9, 2025
    மாநிலம்

    தென் மாவட்டங்களின் 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பஸ்களை அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்

    July 9, 2025
    மாநிலம்

    ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசியல்வாதிகளின் பேச்சுகளை வேடிக்கை பார்க்க முடியாது: பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை
    • பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
    • தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயரும்
    • பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
    • நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.