Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அசோகா பல்கலை. பேராசிரியர் கைதுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்
    தேசியம்

    அசோகா பல்கலை. பேராசிரியர் கைதுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அசோகா பல்கலை. பேராசிரியர் கைதுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதாக சோனிபட் துணை காவல் ஆணையர் நரேந்தர் கடியன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜாதேதி சர்பஞ்ச் மற்றும் பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் யோகேஷ் ஜாதேதியும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மே 17 அன்று அலி கான் மீது தனித்தனியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

    இரண்டு வழக்குகளில் ஒன்றில் அலி கான் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். யோகேஷ் ஜாதேதி தாக்கல் செய்த இரண்டாவது வழக்கில், அலி கான் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளுக்காக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அலி கான் மஹ்முதாபாத் மீதான வழக்குகளை அவசரமாக விசாரிக்க வாய்மொழியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திங்கள்கிழமை (மே 19, 2025) ஏற்றுக்கொண்டார்.

    தலைமை நீதிபதி முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சோனிபட் ராய் காவல் நிலையத்தில் அலி கானுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை ரத்து செய்யக் கோரும் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

    “தேசபக்தியுடன் வெளியிட்ட அறிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தயவுசெய்து நாளை அல்லது அதற்கு அடுத்த நாளுக்கு அதை பட்டியலிடுங்கள்,” என்று சிபல் தலைமை நீதிபதியிடம் கேட்டார். இதையடுத்து, இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்ததாகவும், பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும் கூறி பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் அலி கான் கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான கபில் பால்யன் விளக்கினார். அலி கான் மீதான குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்றும், பல அரசியல் தலைவர்களும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் சமூக ஊடகங்களில் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்

    July 6, 2025
    தேசியம்

    அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

    July 6, 2025
    தேசியம்

    வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை

    July 6, 2025
    தேசியம்

    ”இந்தி மொழியை அல்ல; இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” – சஞ்சய் ராவத் விளக்கம்

    July 6, 2025
    தேசியம்

    ”நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டனர்” – பாஜக, நிதிஷ் குமார் மீது ராகுல் தாக்கு

    July 6, 2025
    தேசியம்

    பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசு

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளையடிக்க முயற்சி” – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    • புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் 4 உணவுகள்
    • குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்
    • ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்
    • மழையால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் | ENG vs IND பர்மிங்காம் டெஸ்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.