Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கம்: சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவு
    மாநிலம்

    ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கம்: சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவு

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கம்: சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: போக்குவரத்துக் கழகங்களின் ரூ.22 கோடி நிலுவையால் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் தெரிவித்துள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் சென்னையில் உள்ள பணியாளர்கள் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

    போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு காலமாக பல சிரமத்துக்கு இடையே உறுப்பினர்களுக்கு மாதம் தவறாமல் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் போக்குவரத்துக் கழகங்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை கடந்த சில மாதங்களாக வழங்கவில்லை.

    அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம் பிப்ரவரி மாதம் முதல் ரூ.8.60 கோடியும், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாத தவணைத் தொகை ரூ.13.40 கோடி என மொத்தம் ரூ.22 கோடி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளன. இதனால் அடிப்படை பணிகளான உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது போன்ற பணிகளிலும், உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்வதிலும் கூட்டுறவு சங்கம் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

    போக்குவரத்துக் கழகங்களிடம் பிடித்தம் செய்த பணத்தை விரைந்து பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மே மாதம் விரைவு போக்குவரத்துக் கழக உறுப்பினர்கள் தவிர மற்ற போக்குவரத்துக் கழக உறுப்பினர்களிடமிருந்து கடன் மனு பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    அதே நேரம், உறுப்பினர்களுக்கு சேமிப்புக்கான வட்டி வழங்குவதற்கு விரைவாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக வாக்குறுதி அளித்தபடி பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது

    July 9, 2025
    மாநிலம்

    சென்னையில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம்: மாதிரி வடிவமைப்பை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்

    July 9, 2025
    மாநிலம்

    ஹஜ் பயணத்துக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

    July 9, 2025
    மாநிலம்

    தேர்தல் படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்: பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் திட்டவட்டம்

    July 9, 2025
    மாநிலம்

    ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

    July 9, 2025
    மாநிலம்

    தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி: கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் செல்போன், பைக், டிராக்டர் திருட்டு
    • திமுக வாக்குறுதி அளித்தபடி பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது
    • பாரத் பந்த் புதுப்பிப்பு: சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதால் போக்குவரத்து குறும்புகளுக்கான பெங்களூரு பிரேஸ்கள்; தவிர்க்க வேண்டிய வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்: மும்பை பட்டயக் கணக்காளர் தற்கொலை
    • சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: ‘பன் பட்டர் ஜாம்’ இயக்குநர் உருக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.