Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வேளாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம்
    மாநிலம்

    வேளாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம்

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வேளாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாசன பரப்பு, பால், முட்டை உற்பத்தி அதிகரிப்பு என வேளாண் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5 வேளாண் பட்ஜெட்கள் அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆட்சியில் சராசரியாக 1.36% ஆக இருந்த வேளாண் வளர்ச்சி, தற்போது 5.66% ஆக உயர்ந்துள்ளது. திமுக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டங்களால், கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தை எட்டியது. பாசனம் பெற்ற நில பரப்பு 36.07 லட்சம் ஹெக்டரில் இருந்து 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உணவு பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன.

    5,427 கி.மீ. நீளத்துக்கு சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 8,540 சிறுபாசன குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,382 புதிய பண்ணை குட்டைகள், 2,474 ஆழ்துளை, குழாய் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் மீள்சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டன.

    213 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்துடன் இணைக்கப்பட்டு, ரூ.6,636 கோடியில் 22.71 லட்சம் டன் விளைபொருள் வர்த்தகம் நடைபெற்று 19 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.

    வேளாண் துறை இயந்திரமயமாக்கல் திட்டப்படி ரூ 499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளன. ரூ.96.56 கோடியில் 1,205 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சிறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. 1,652 புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இ-வாடகை சேவை மையங்கள் மூலம் 69,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடியிலும், 814 சிறுபாசன ஏரிகள் ரூ75.59 கோடியிலும் சீரமைக்கப்பட்டன. 24 மாவட்டங்களில் 88 தடுப்பணைகள் ரூ.519 கோடியில் கட்டப்பட்டன. ஓராண்டில் 8,362 டன் பால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், திமுக அரசின் திட்டங்களால் 10,808 டன்னாக அதிகரித்துள்ளது.

    பள்ளி சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வாரம் 5 நாட்களும் 5 முட்டைகள் வழங்க முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். தேவைக்கேற்ப முட்டைகள் தாராளமாக கிடைக்கும் வகையில் 350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தியாகின. ரூ.1,428 கோடியில் 72 மீன் இறங்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரங்கம்பாடி, ராமேசுவரம், திருவொற்றியூர் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழில் சிறக்க பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளால், வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மீனவர் நலன் என அனைத்து துறைகளிலும் சிறந்து, ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாங்கனி திருவிழாவை ஒட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    July 9, 2025
    மாநிலம்

    புதுச்சேரி பந்த்: கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை – தனியார் பள்ளிகள் விடுமுறை

    July 9, 2025
    மாநிலம்

    தஞ்சை: உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து நீர் நிலைகளில் வறட்சியை போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

    July 9, 2025
    மாநிலம்

    இணையத்தில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள்: 48 மணி நேரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

    July 9, 2025
    மாநிலம்

    பணி நெருக்கடியால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை; காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி

    July 9, 2025
    மாநிலம்

    கல்லூரி பின்வாயில் வழியாக வெளியேறி மருத்துவ விடுப்பில் சென்ற பேராசிரியை நிகிதா!

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அம்லா Vs அலோ வேரா: முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
    • டொயோட்டா முதல் ஹோண்டா: வாகன உற்பத்தியாளர்கள் ஏன் ராக்கெட்டுகளை உருவாக்கி விண்வெளியில் ஓட்டுகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராஜஸ்தானில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்
    • மாங்கனி திருவிழாவை ஒட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
    • பெற்றோருக்குரிய உதவிக்குறிப்புகள்: சரியான பெற்றோர் ஏன் ஒரு குறைபாடுள்ள மற்றும் (ஆபத்தான) கருத்து | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.