Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பிரதமர் பிம்பம் பலவீனமானதை மறைக்கவே தூது குழு அமைப்பு: திருமாவளவன் விமர்சனம்
    மாநிலம்

    பிரதமர் பிம்பம் பலவீனமானதை மறைக்கவே தூது குழு அமைப்பு: திருமாவளவன் விமர்சனம்

    adminBy adminMay 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் பிம்பம் பலவீனமானதை மறைக்கவே தூது குழு அமைப்பு: திருமாவளவன் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய பாஜக அரசு அமைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக 7 நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். நல்லெண்ணத் தூதுக் குழுக்களை அனுப்புவது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகிறது.

    அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற இந்திய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். அதனால் உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

    இதேபோல, போர் நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததும், அதற்கு அவர் கூறிவரும் காரணங்களும் பிரதமர் மோடியின் பிம்பத்தைப் பலவீனப்படுத்துவதாக அமைந்துவிட்டன.

    இவ்வாறு உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை மாற்றுவதற்காகவும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர்ப்பதற்காகவும்தான் இந்த தூதுக் குழுக்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

    மேலும், தூதுக் குழுக்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால், பாஜக அரசு பின்பற்றி வரும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 9, 2025
    மாநிலம்

    தமிழகத்துக்கு அவப்பெயரை தேடி தந்ததே திமுக அரசின் சாதனை: நயினார் நாகேந்திரன்

    July 9, 2025
    மாநிலம்

    “எனது கரங்களைப் பிடித்து கவலைகளைத் தெரிவித்த கோவை மக்கள்…” – அதிமுகவினருக்கு இபிஎஸ் மடல்

    July 9, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் வெப்பநிலை 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 7 டிகிரி வரை உயர வாய்ப்பு

    July 9, 2025
    மாநிலம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்களுக்கு ஆட்சியர் தரும் ‘அலர்ட்’ குறிப்புகள்

    July 9, 2025
    மாநிலம்

    மாங்கனி திருவிழாவை ஒட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் ‘கில்’ வில்லன்!
    • பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்
    • தினமும் 10 நிமிடங்கள் பின்னோக்கி நடக்க 7 காரணங்கள்
    • வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்
    • கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.