Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த ஹரியானா யூடியூபர் – நடந்தது என்ன?
    தேசியம்

    பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த ஹரியானா யூடியூபர் – நடந்தது என்ன?

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த ஹரியானா யூடியூபர் – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார் ஜோதி மல்ஹோத்ரா.

    இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உட்பட 6 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு தகவல்களை உளவு சொன்னதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

    ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் அமைந்து உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், ஜோதியும், டேனிஸும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ கால்கள் மூலமாகவும் பேசி வந்துள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் ஜோதி. இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    மேலும், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட 6 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலி, இந்தோனேசியா: கைது செய்யப்பட்டுள்ள ஜோதி, பாலி, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அங்கிருந்தவாறு பல்வேறு பாகிஸ்தான் உளவாளிகளுக்கு(பிஐஓ) தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளார்.

    ஹரியானா மாணவர் கைது: இதனிடையே, பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களைக் கொடுத்து வந்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் தேவேந்திர சிங் தில்லான் கைது செய்யப்பட்டுள்ளார்.

    25 வயதான தேவேந்திர சிங் தில்லான், பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் துப்பாக்கி உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்தார்புர் வழியாக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று வந்ததும், பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புக்கு பல்வேறு ரகசிய தகவல்களைப் பரிமாறியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தில்லான், உளவு வேலை செய்வதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பானது அதிகப் பணம் கொடுத்திருப்பதாகவும், இவர் பாட்டியாலா ராணுவ தளத்தின் புகைப்படங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

    அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பேர், பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை

    July 6, 2025
    தேசியம்

    ”இந்தி மொழியை அல்ல; இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” – சஞ்சய் ராவத் விளக்கம்

    July 6, 2025
    தேசியம்

    ”நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டனர்” – பாஜக, நிதிஷ் குமார் மீது ராகுல் தாக்கு

    July 6, 2025
    தேசியம்

    பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசு

    July 6, 2025
    தேசியம்

    பிஹாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா வீட்டில் சுட்டுக் கொலை

    July 6, 2025
    தேசியம்

    இன்னும் 40 ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வேன்: 90-வது பிறந்த நாளில் தலாய் லாமா நம்பிக்கை

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை
    • மதநல்லிணக்க திருவிழா | மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் @ ராமநாதபுரம்
    • பட்டாசு ஆலைகளில் விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி
    • 10 அழகான செல்ல நாய் இனங்கள் நம்பமுடியாத நுண்ணறிவுக்கு பெயர் பெற்றவை
    • ”இந்தி மொழியை அல்ல; இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்” – சஞ்சய் ராவத் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.