Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நிறைவு
    மாநிலம்

    உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நிறைவு

    adminBy adminMay 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நிறைவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். சுமார் 10 மணிநேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என முன்னாள் எம்எல்ஏ-வின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி. இவர் 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக உசிலம்பட்டி சந்தைப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கண்ணன் புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    அம்மனுவில், ‘கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக பி.நீதிபதி பதவி வகித்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன் ஆகியோர் பெயரில் சொத்துக்களை சேர்த்துள்ளதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரங்களுடன் புகார் அளித்தும் பி.நீதிபதி, அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் சொத்து குவிப்பு வழக்குப் பதியவில்லை. எனவே நான் அளித்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி, உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதிக்கு எதிரான புகார் மீது முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளது. தற்போது வழக்கு பதிய ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் அனுமதித்துள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்குள் சொத்து குவிப்பு வழக்கு பதியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ பி.நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து இன்று உசிலம்பட்டி அண்ணா நகரிலுள்ள முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் வீட்டில் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர்.

    அவரது வீட்டில் அதிகாலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்தது. இதில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் எம்எல்ஏவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சோதனை தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுடன் நேரில் வந்து சோதனை முடியும் வரை உடனிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்

    July 11, 2025
    மாநிலம்

    அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

    July 11, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    July 11, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலி: கேட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

    July 11, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் இந்தி பேசும் நிலை உருவாகி இருக்கும்!” – உதயநிதி ஸ்டாலின்

    July 11, 2025
    மாநிலம்

    அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: ஹெச்.ராஜா

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்
    • உயர் பி.எம்.ஐ மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது: மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் அதிகப்படியான எடை எவ்வாறு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
    • உங்களிடம் ADHD இருந்தால் உங்கள் காலை காபி உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்; அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பிரேக்-அப்’ வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயன்தாரா!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.