Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு அழகர்மலைக்கு திரும்பினார் கள்ளழகர்!
    ஆன்மீகம்

    பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு அழகர்மலைக்கு திரும்பினார் கள்ளழகர்!

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு அழகர்மலைக்கு திரும்பினார் கள்ளழகர்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர், பல லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு இன்று (மே 16) காலையில் கோயிலுக்கு திரும்பினார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மலர்கள் தூவி வரவேற்றனர். அப்போது 21 பெண்கள் பூசணிக்காயில் தீபமேற்றி கள்ளழகருக்கு திருஷ்டி கழித்தனர்.

    மதுரை அழகர்கோவில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் நேரிக்கம்புடன் மே 10-ல் அழகர்மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மே 11-ல் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    மே 12-ல் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூடிக் கொண்டு ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். பின்பு சித்ரா பவுர்ணமியன்று அன்று காலை 5.59 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்பு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.மே 13-ல் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோனம் அளித்தார். அன்றிரவு தொடங்கி மே 14-ல் காலை வரை தசாவதாரம் நடந்தது.

    ராமராயர் மண்டபத்திலிருந்து திருமஞ்சனமாகி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அன்றிரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டகப்படியில் எழுந்தருளினார். பின்பு அங்கு மே 15-ல் அதிகாலையில் 3.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர், தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி அன்றிரவு மூன்றுமாவடியில் மக்களிடம் விடைபெற்று மலைக்கு திரும்பினார்.

    அன்றிரவு சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் கள்ளழகரின் பயணத்தால் ஏற்பட்ட உடல் களைப்பை போக்கும் வகையில், கோயில் பட்டர் கை, கால்கள் பிடித்துவிடும் நிகழ்வு நடந்தது. அதனைத்தொடர்ந்து இன்று (மே 16) காலையில் அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபம், கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி வழியாக காலை 10 மணியளவில் கோயில் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டு, கள்ளழகரை மலர்கள் தூவி வரவேற்றனர்.

    பின்னர் கருப்பணசாமி கோயிலில் தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் நுழைந்தபோது 21 சுமங்கலி பெண்கள் பூசணிக்காயில் கற்பூர தீபமேற்றி திருஷ்டி கழித்தனர். பின்னர் 10.40 மணியளவில் கோயிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். 10-ம் நாளான மே 17-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்குத் திரும்பும் வரை 494 மண்டகப்படிகளில் எழுந்தருளி பல லட்சம் பக்தர்களுக்கு அருளாசி தந்தார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ந.யக்ஞ நாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    நவக்கிரக தோஷம் நீக்கும் அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி

    July 13, 2025
    ஆன்மீகம்

    விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் – 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்!

    July 12, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 15 முதல் பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தம்

    July 11, 2025
    ஆன்மீகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை!

    July 11, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடக்கம் 

    July 11, 2025
    ஆன்மீகம்

    காரைக்காலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோவில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு – விரைவில் செயலி அறிமுகம்
    • ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் விட அதிக ரெஸ்வெராட்ரோல் கொண்ட 6 உணவுகள்
    • ‘கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ – ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து
    • கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் 3 பழக்கங்கள், அதில் ஆல்கஹால் இல்லை – இந்தியாவின் நேரங்கள்
    • எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரோக் மற்றும் எக்ஸ் ஒருங்கிணைப்புடன் AI பேரரசை விரிவுபடுத்துவதற்காக XAI இல் billion 2 பில்லியனை முதலீடு செய்கிறது, மதிப்பீட்டை 3 113 பில்லியனாக உயர்த்துகிறது | அறிக்கை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.