Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘அறந்தாங்கியில் இம்முறை சூரியன் உதிக்க வேண்டும்!’ – அரசர் மகனுக்கு செக் வைக்கும் திமுக
    மாநிலம்

    ‘அறந்தாங்கியில் இம்முறை சூரியன் உதிக்க வேண்டும்!’ – அரசர் மகனுக்கு செக் வைக்கும் திமுக

    adminBy adminMay 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அறந்தாங்கியில் இம்முறை சூரியன் உதிக்க வேண்டும்!’ – அரசர் மகனுக்கு செக் வைக்கும் திமுக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    எம்​ஜிஆர் காலத்து அரசி​யல்​வா​தி​யான சு.​திரு​நாவுக்​கரசர் 1977 தொடங்கி 1996 வரை தொடர்ச்​சி​யாக 6 முறை அறந்​தாங்கி தொகு​தியை வென்​றவர். அமைச்​சர், துணை சபா​நாயகர் என ஒரு ரவுண்டு வந்​தவர், ஒரு​கட்​டத்​தில் தனிக் கட்சி தொடங்​கி​யும் அறந்​தாங்​கி​யில் ஆதிக்​கம் செலுத்​தி​னார். பின்​னர், பாஜக-​வில் இணைந்து மத்​திய அமைச்​ச​ராக​வும் வலம் வந்த அரசர், பிற்​பாடு காங்​கிரஸில் இணைந்து மாநில தலை​வர் அந்​தஸ்​துக்கு தன்னை உயர்த்​திக் கொண்​டார்.

    இந்த நிலை​யில், 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் தனது மகன் ராமச்​சந்​திரனை அறந்​தாங்​கி​யில் நிறுத்தி ஜெயிக்​க​வைத்​தார் அரசர். அதே​போல், 2024-ல் எப்​படி​யும் சோனி​யா, ராகுல் சிபாரிசில் திருச்சி தொகு​தியை தனக்​காக அவர் கேட்டு வாங்​கி​விடு​வார் என காங்​கிரஸ்​காரர்​கள் சொல்​லிக் கொண்​டிருந்​தார்​கள். ஆனால், அது நடக்​காமல் போனது. திரு​நாவுக்​கரசருக்கு திருச்சி மீண்​டும் கிடைத்​து​விடக் கூடாது என்​ப​தில் திருச்சி திமுக-​விலும் சிலர் கர்​வம்​கட்டி காய்​நகர்த்​தி​னார்​கள். இதை அப்​போது வெளிப்​படை​யாகவே சொன்ன அரசர், “எனக்கு மீண்​டும் திருச்சி சீட் கிடைத்​து​விடக்​கூ​டாது என்​ப​தில் கண்​ணும் கருத்​து​மாக இருந்த திமுக-​வினர் யார் யார் என்​ப​தெல்​லாம் எனக்​குத் தெரி​யும்” என்​றார்.

    இந்​நிலை​யில், மக்​கள​வைத் தேர்​தலின் போது (அறந்​தாங்கி தொகு​தியை உள்​ளடக்​கிய) ராம​நாத​புரம் மக்​கள​வைத் தொகு​தி​யின் இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் வேட்​பாளர் நவாஸ் கனி அறி​முகக் கூட்​டம் அறந்​தாங்​கி​யில் நடந்​தது. அப்​போது, தொகுதி எம்​எல்​ஏ-​வான ராமச்​சந்​திரனின் படம் இல்​லாமலே ஃப்​ளெக்ஸ் வைத்​திருந்​ததை காங்​கிரஸார் சர்ச்​சை​யாக்​கி​னார்​கள். அப்​போது அங்​கிருந்த அமைச்​சர் ரகுப​தி​யிடம், “அறந்​தாங்​கியை கூட்​டணி கட்​சிக்கே ஒதுக்​கு​வ​தால் இங்கு திமுக வளர்ச்சி அடைய​வில்​லை. அதனால் அடுத்த முறை அறந்​தாங்​கி​யில் உதயசூரியன் போட்​டி​யிட வேண்​டும். அதில்​லாமல் மீண்​டும் காங்​கிரஸுக்கு ஒதுக்​கி​னால் அறி​வால​யத்தை முற்​றுகை​யிட்டு நியா​யம் கேட்​போம்” என திமுக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான உதயம் சண்​முகம் ஆவேச​மாக பேசி​னார். இதை தலை​மை​யின் கவனத்​துக்கு கொண்டு செல்​வ​தாகச் சொல்லி திமுக-​வினரை அமைச்​சர் ரகுபதி அப்​போது சமா​தானப்​படுத்​தி​னார்.

    இதன்​பிறகு, எம்​எல்​ஏ-​வான ராமச்​சந்​திரன் கலந்​து​கொள்​ளும் நிகழ்ச்​சிகளில் கலந்​து​கொள்​வ​தில் திமுக-​வினர் ஆர்​வம் காட்​டா​மலேயே இருந்து வரு​கி​றார்​கள். இதுகுறித்து நம்​மிடம் பேசிய அறந்​தாங்கி திமுக-​வினர், “வெற்றி பெற்ற பிறகு திமுக-​வினர் யாரை​யும் ராமச்​சந்​திரன் கண்​டு​கொள்​வ​தில்​லை. அரசு நிகழ்ச்​சிகள் குறித்​தும் தகவல் தெரி​விப்​ப​தில்​லை. எப்​படி​யும் தனது தந்​தை​யார் மூல​மாக மறு​படி​யும் அறந்​தாங்கி சீட்டை வாங்​கி​விடலாம் என அவர் நினைக்​கி​றார். ஆனால், மீண்​டும் அவருக்​காக களப்​பணி செய்​யும் நிலை​யில் திமுக-​வினர் இல்​லை. திமுக லட்டு கணக்​காய் ஜெயிக்​கக் கூடிய அறந்​தாங்​கியை தொண்​டர்​களின் விருப்​பத்​துக்கு மாறாக காங்​கிரஸுக்கு ஒதுக்​கி​னால் ஒத்​துழை​யாமை இயக்​கம் தான் நடக்​கும்” என்​ற​னர்.

    இது குறித்து காங்​கிரஸ் கட்​சி​யின் புதுக்​கோட்டை தெற்கு மாவட்​டத் தலை​வர் ராம.சுப்​பு​ரா​மிடம் கேட்​டதற்​கு, “யாருக்கு சீட் என்​பதை எல்​லாம் காங்​கிரஸ் தலைமை பார்த்​துக்​கொள்​ளும். ஆனால், ராமச்​சந்​திரனைப் பொறுத்​தவரை அறந்​தாங்கி தொகுதி வளர்ச்​சிக்​காக முதல்​வர், துணை முதல்​வரிடம் பேசி பல்​வேறு நலத்​திட்​டங்​களைக் கொண்டு வந்​திருக்​கி​றார். அதனால், அறந்​தாங்கி மக்​கள் மத்​தி​யில் அவருக்கு நல்ல மதிப்​பும் மரி​யாதை​யும் உள்​ளது. அதனால் மீண்​டும் அவருக்கே சீட் கிடைக்​கும்; அவரும் அமோக வெற்றி பெறு​வார்” என்​றார்.

    இதனிடையே மே 11-ம் தேதி, ஆவுடை​யார்​கோ​வில் அருகே நடந்த திமுக சாதனை விளக்​கப் பொதுக்​கூட்​டத்​தில் பேசிய உதயம் சண்​முகம், “தேர்​தல் நெருங்​கி​விட்​டது. அதனால் சுற்​றிச் சுற்றி வரு​கிறீர்​கள். நீங்​கள் நின்​றாலும் தோல்வி அடைவீர்​கள். ஆகவே, அனை​வ​ரும் உதயசூரியன் சின்​னத்​துக்கு வாக்​களிக்க வேண்​டும். இதை தளப​தி​யிட​மும் பேச தயா​ராய் இருக்​கிறேன்” என்று அரசர் அண்ட் கோ-வை மறை​முக​மாக சாடி​னார். அறந்​தாங்கி மக்​கள் இன்​ன​மும் திரு​நாவுக்​கரசரை தங்​களின் செல்​லப்​பிள்​ளை​யாகவே நினைக்​கி​றார்​கள். அப்​படி இருக்​கை​யில், அரசர் குடும்​பத்தை ஒதுக்​கி​விட்டு திமுக-வுக்கு சீட் கொடுத்​தால் அறந்​தாங்​கி​யில் சூரியன் உதிப்​பது அத்​தனை எளி​தாகிவிடுமா என்​ன?



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நவ.23 வரை கனமழை வாய்ப்பு

    December 2, 2025
    மாநிலம்

    பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரிப்பு

    December 2, 2025
    மாநிலம்

    “சமத்துவ நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன்” – வைகோ

    December 2, 2025
    மாநிலம்

    “சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும்” – மார்க்கண்டேய கட்ஜூ

    December 2, 2025
    மாநிலம்

    கோவைக்கு நவ.19-ல் பிரதமர் மோடி வருகை: 3,000 போலீஸார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்

    December 2, 2025
    மாநிலம்

    கடும் பணி நெருக்கடி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு – வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது
    • முடிவுக்கு வந்தது ‘மனுஷி’ விவகாரம்: வெற்றிமாறன் தகவல்
    • வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நவ.23 வரை கனமழை வாய்ப்பு
    • ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!
    • இதய ஆரோக்கியம்: இதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பொதுவாக என்ன இருக்கிறது, இருதயநோய் நிபுணர் வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.