Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கனிம வளத்துறை வேண்டாம் என்று துரைமுருகனே சொன்னாரா? – வேலூர் திமுகவில் வட்டமடிக்கும் விவாதம்
    மாநிலம்

    கனிம வளத்துறை வேண்டாம் என்று துரைமுருகனே சொன்னாரா? – வேலூர் திமுகவில் வட்டமடிக்கும் விவாதம்

    adminBy adminMay 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கனிம வளத்துறை வேண்டாம் என்று துரைமுருகனே சொன்னாரா? – வேலூர் திமுகவில் வட்டமடிக்கும் விவாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இவரை எல்லாம் ஸ்டாலின் அத்தனை எளிதில் கைவைக்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த துரைமுருகனின் வேலூர் மாவட்ட திமுகவினர், அவரது இலாகா மாற்றத்தால் சற்றே ஷேக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

    கருணாநிதி முதல்​வ​ராக இருந்த போது மூத்த அமைச்​சர் துரை​முரு​கன் தனித்த செல்​வாக்​குடன் வலம் வந்​தார். தனது அணுகு​முறை​களால் அடிக்​கடி அதிருப்​தி​களுக்கு ஆளா​னாலும் கருணாநிதி அவரை கடிந்து கொண்​ட​தில்​லை. காரணம், நெருக்​கடி​யான நேரங்​களில் கட்​சிக்​காக துரை​முரு​கன் தந்​திருக்​கும் பங்​களிப்பு அப்​படி. ஆனால், கருணாநி​தி​யின் மறைவுக்​குப் பிறகு கட்​சிக்​குள் துரை​முரு​க​னுக்​கான இருப்பு சரி​யத் தொடங்​கியது. அதைத் தெரிந்து கொண்டு பல நேரங்​களில் அவரும் வெளிப்​படை​யாகவே புலம்​ப​வும் ஆரம்​பித்​தார். “இன்​பநிதி அமைச்​சர​வை​யிலும் இந்த அவை​யில் இருப்​பேன்” என்று சொன்​னதெல்​லாம் அதன் வெளிப்​பாடு தான்.

    துரை​முரு​கன் மீது தனக்கு சங்​கடங்​கள் இருந்​தா​லும் அவர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்க முடி​யாத நிலை​யில் இருந்​தார் ஸ்டா​லின். பேசக்​கூ​டாத வார்த்​தைகளைப் பேசி​ய​தால் பொன்​முடியை அமைச்​சர் பதவியி​லிருந்​தும் கட்​சிப் பதவியி​லிருந்​தும் அடுத்​தடுத்து தூக்​கிய ஸ்டா​லின், அதே​போன்று ஒரு சர்ச்​சை​யில் சிக்​கிய துரை​முரு​கனை கண்​டும் காணா​மல் விட்​டிருந்​தார். தான் பேசிய வார்த்​தைகளுக்​காக வலிய வந்து வருத்​தம் தெரி​வித்​தார் துரை​முரு​கன். இந்த நிலை​யில், யாரும் எதிர்​பா​ராத வித​மாக, துரை​முரு​க​னிடம் இருந்த கனிமவளத் துறையை ரகுபதி வசம் ஒப்​படைத்த ஸ்டா​லின், ரகுபதி வசமிருந்த சட்​டத் துறையை துரை​முரு​கன் வசம் ஒப்​படைத்​திருக்​கி​றார்.

    திமுக ஆட்​சி​யில் பெரும்​பாலும் பொதுப்​பணித்​துறைக்கே அமைச்​ச​ராக இருந்​திருக்​கி​றார் துரை​முரு​கன். ஆனால், இந்த முறை பொதுப்​பணித்​துறையை தனி​யாக பிரித்து எ.வ.வேலு​விடம் தந்த ஸ்டா​லின், துரை​முரு​க​னுக்கு நீர்​வளத் துறையை​யும் கனிம வளத்​துறையை​யும் தந்​தார். ஏற்​புடையதோ இல்​லையோ இந்த மாற்​றத்தை குறைசொல்​லாமல் ஏற்​றுக் கொண்​டார் துரை​முரு​கன். ‘வளம் தரும்’ பொதுப்​பணித் துறை இல்லை என்​றாலும் கனிமவளத் துறை கைவசமிருக்​கிறதே என்று துரை​முரு​க​னின் விசு​வாசிகளும் கொண்​டாட்​டத்​தில் தான் இருந்​தார்​கள்.

    இந்​நிலை​யில், இப்​போது திடீரென நடந்​திருக்​கும் இந்த இலாகா மாற்​றம் குறித்து திமுக தரப்​பில் எழுந்த விவாதங்​கள் இன்​னும் ஓய்ந்​த​பாடில்​லை. கடந்த 4 ஆண்​டு​களில் மணல் விற்​பனை​யில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறை​கேடு நடத்​திருப்​ப​தாக கூறி சில மாதங்​களுக்கு முன்பு கட்​டு​மான நிறு​வனங்​கள், மணல் குவாரி​களில் வரு​மான வரித்​துறை​யினர் திடீர் ரெய்​டு​களை நடத்​தினர். காட்​பாடி, சென்​னை​யில் உள்ள துரை​முரு​க​னுக்​குச் சொந்​த​மான வீடு​களி​லும் ரெய்டு நடத்​தப்​பட்​டது. தமி​ழ​கத்​தில் இருந்து கனிமங்​கள் அண்டை மாநிலங்​களுக்கு கடத்​தப்​படு​வ​தாக எழுந்த குற்​றச்​சாட்​டின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் விசா​ரணை நடத்தி வரு​கிறது.

    இது குறித்து சட்​டமன்​றத்​தில் அதி​முக-​வினர் எழுப்​பிய கேள்விக்கு துரை​முரு​கன் அளித்த பதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கே திருப்தி அளிக்​க​வில்​லை. மேலும், கட்​டு​மான பொருட்​களின் திடீர் விலை ஏற்​றத்​தால் கட்​டு​மான நிறு​வனங்​கள் அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரி​வித்து வந்​தன. அரசு ஒப்​பந்​த​தா​ரர்​கள் கூட கட்​டு​மான வேலை​களைத் தொடர முடி​யாமல் கடும் நெருக்​கடிக்கு ஆளாகினர். இதையெல்​லாம் துரை​முரு​கன் திறம்​படக் கையாள தவறி​விட்​ட​தாக கட்​சித் தலைமை அதிருப்தி அடைந்​த​தாகச் சொல்​கி​றார்​கள். மணல் அதிபர்​களுக்கு அனுசரணை​யாக நடந்​ததுடன், மணல் குவாரி​கள் தொடர்​பான ‘கணக்கு வழக்​கு’களை தரு​வ​தி​லும் துரை​முரு​கன் சுணக்​கம் காட்​டிய​தாகச் சொல்​லப்​படு​கிறது. இதையெல்​லாம் சீர்​தூக்​கிப் பார்த்​துத்​தான் அவரிட​மிருந்த கனிமவளத்​துறையை பறித்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

    இதுகுறித்து திமுக-வின் காட்​பாடி பகு​திச் செய​லா​ளர் வன்​னிய​ராஜா​விடம் கேட்​டதற்​கு, “இலாகா மாற்​றம் என்​பது முதல்​வர் எடுக்​கும் முடிவு. எந்​தத் துறைக்கு யார் சிறப்​பாக செயல்​படு​வார்​கள் என்​பதை மனதில் வைத்​துத் தான் முதல்​வர் ஒரு சில முடிவு​களை எடுக்​கி​றார். அதன்​படி சட்ட ரீதி​யாக சந்​திக்க வேண்​டிய பல விஷ​யங்​கள் திமுக-வுக்கு இருப்​ப​தால் துரை​முரு​க​னுக்கு சட்​டத்​துறை ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ‘கனிமவளத் துறை எனக்கு வேண்​டாம். கட்​சிக்​காரர்​களை​யும் திருப்​திப்​படுத்த வேண்​டும், அரசை​யும் திருப்​திப்​படுத்த வேண்​டும் என்​றால் என்​னிடம் கனிமவளத் துறை இருக்​கக்​கூ​டாது’ என 6 மாதங்​களுக்கு முன்பே முதல்​வரிடம் துரை​முரு​கன் சொல்​லி​விட்​டார்.

    வன்னியராஜா​

    துரை​முரு​கன் சட்​டம் படித்​தவர் என்​ப​தால் சட்ட நுணுக்​கங்​களை அறிந்​தவர். எந்​தப் பிரச்​சினை​யாக இருந்​தா​லும் அதை சட்​டரீ​தி​யாக அவரால் அணுக முடி​யும் என்​ப​தால் அவருக்கு சட்​டத் துறை வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில், எங்​களுக்கு எந்த ஒரு வருத்​த​மும் இல்​லை. அமைச்​சர் பதவியை பறித்​தால் தான் நாங்​கள் வருத்​தப்பட வேண்​டும். எந்​தத் துறை​யாக இருந்​தால் என்​ன… அமைச்​சர் அமைச்​சர் தானே?” என்​றார் கூலாக.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நவ.23 வரை கனமழை வாய்ப்பு

    December 2, 2025
    மாநிலம்

    பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரிப்பு

    December 2, 2025
    மாநிலம்

    “சமத்துவ நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன்” – வைகோ

    December 2, 2025
    மாநிலம்

    “சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும்” – மார்க்கண்டேய கட்ஜூ

    December 2, 2025
    மாநிலம்

    கோவைக்கு நவ.19-ல் பிரதமர் மோடி வருகை: 3,000 போலீஸார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்

    December 2, 2025
    மாநிலம்

    கடும் பணி நெருக்கடி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு – வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது
    • முடிவுக்கு வந்தது ‘மனுஷி’ விவகாரம்: வெற்றிமாறன் தகவல்
    • வானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நவ.23 வரை கனமழை வாய்ப்பு
    • ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!
    • இதய ஆரோக்கியம்: இதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பொதுவாக என்ன இருக்கிறது, இருதயநோய் நிபுணர் வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.