Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தர்பூசணி சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    தர்பூசணி சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தர்பூசணி சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

    தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

    இதில் தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 82 விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு விவசாய நலச்சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் கே.மணிகண்டன், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தி.கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு 10 சதவீதம் வரை நல்ல விலை கிடைத்து வந்தது.

    இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக குளிர்பானங்கள் சரியாக விற்பனையாகாத நிலையில், தர்பூசணி பழங்களால் தான் குளிர்பானங்கள் விற்பனையாகவில்லை என காரணம் காட்டி, அதன் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மூலம் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் தர்பூசணியில் சிவப்பு சாயம், சர்க்கரை பாகு உள்ளிட்டவை சேர்க்கப்படுவதாக அவர் கூறியதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசு அதிகாரியே தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி பழங்களை நஷ்டமடைய செய்யும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது அனைத்து விவசாயிகளையும் கொந்தளிக்க செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10 ஆண்டுகள் ஆனாலும் கடனில் இருந்து விடுபட முடியாது.

    இதை கருத்தில் கொண்டு தர்பூசணி சாகுபடி செய்து அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும். இதற்கு காரணமான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    July 13, 2025
    மாநிலம்

    கோயில் சொத்துகளுக்கான நிதி ஆதாரம் என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் தமிழக பாஜக

    July 13, 2025
    மாநிலம்

    விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை

    July 13, 2025
    மாநிலம்

    ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: தவளேஸ்வரம் அணை திறப்பால் ஏனாமில் புகுந்த வெள்ளம்

    July 13, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் விபத்து எதிரொலி: ரயில் பயணிகளுக்காக சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    July 13, 2025
    மாநிலம்

    உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17 அதிமுக ஆர்ப்பாட்டம்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
    • டோராய் ஒரு கிண்ணம் வைத்திருப்பதன் சுகாதார நன்மைகள்
    • கோயில் சொத்துகளுக்கான நிதி ஆதாரம் என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் தமிழக பாஜக
    • அடிப்படை டம்பல்ஸுடன் வீட்டில் எடை பயிற்சி செய்வது எப்படி
    • விபத்துகளால் ரத்தாகும் சென்னை ரயில்கள்: சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தை பயன்படுத்த வலுக்கும் கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.