Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஐபிஎல் வீரர்களை விடுவிக்க அணிகளுக்கு பிசிசிஐ உத்தரவு
    விளையாட்டு

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஐபிஎல் வீரர்களை விடுவிக்க அணிகளுக்கு பிசிசிஐ உத்தரவு

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஐபிஎல் வீரர்களை விடுவிக்க அணிகளுக்கு பிசிசிஐ உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், தேசிய அணிக்காக விளையாட வேண்டியது இருப்பதால் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறார். இதனால் பிளே ஆஃப் சுற்றில் அவருக்கு பதிலாக இலங்கை வீரர் குஷால் மெண்டிஸை குஜராத் அணி ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் நாளை (17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பின்னர் 29, 30 ஜூன் 1-ம் தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.

    திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இங்கிலாந்து, வரும் 29-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்கு பயிற்சியில் ஈடுபட வேண்டியது உள்ளது.

    இந்நிலையில் ஜாஸ் பட்லர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் எஞ்சிய லீக் ஆட்டங்களில் மட்டும் விளையாடுவார் எனவும் அதன் பின்னர் அவர், இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க தாயகம் புறப்பட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் டெல்லி கேப்பிடல்ஸ் (மே 18), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (மே 22), சென்னை சூப்பர் கிங்ஸ் (மே 25) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

    பிளே ஆஃப் சுற்றில் ஜாஸ் பட்லருக்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த குஷால் மெண்டிஸை ஒப்பந்தம் செய்வதற்கான நடவடிக்கையில் குஜராத் அணி களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்தின் மொயின் அலி காயம் காரணமாக மீண்டும் அணியுடன் இணையவில்லை. இதேபோன்று அதிரடி வீரரான ரோவ்மன் பாவெலும் (மேற்கு இந்தியத் தீவுகள்) காயம் காரணமாக கொல்கத்தா அணிக்கு திரும்பவில்லை.

    அதேவேளையில் ஜோப்ரா ஆர்சச்ர் (ராஜஸ்தான்), சேம் கரண், ஜேமி ஓவர்டன் (சிஎஸ்கே) ஆகியோரும் திரும்பமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் ஆகியோர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் பிரேசர் மெக்கர்க்குக்கு பதிலாக ஒப்பந்தம் செய்துள்ள வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க முஸ்டாபிஸூர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை.

    முஸ்டாபிஸூர் ரஹ்மான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். அங்கு வரும் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெறும் டி 20 தொடர்களில் பங்கேற்கிறார். இதனால் இந்த விவகாரத்தில் பிசிசிஐ-யின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்நோக்கி உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சன் மீண்டும் அணியில் இணைய உள்ளார். ஆனால் லீக் ஆட்டங்கள் முடிவடைந்ததும் தாயகம் புறப்பட்டுச் சென்று தேசிய அணியுடன் இணைய உள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!

    September 14, 2025
    விளையாட்டு

    உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்

    September 14, 2025
    விளையாட்டு

    உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்

    September 14, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா – சீன மகளிர் அணிகள் இன்று மோதல்

    September 14, 2025
    விளையாட்டு

    ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி

    September 14, 2025
    விளையாட்டு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
    • ‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
    • நவீன வேளாண் இயந்திரங்களால் லாபத்தை அறுவடை செய்யும் பழங்குடி விவசாயிகள்!
    • வலிமை பயிற்சிக்குப் பிறகு ஏன் நடப்பது சூப்பர்சார்ஜ்ஸ் கொழுப்பு எரியும் மீட்பு (மற்றும் நீண்ட ஆயுளுக்கு கூட உதவக்கூடும்) – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் – நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.