Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்: ஓபிஎஸ் கருத்து
    மாநிலம்

    விஜய் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்: ஓபிஎஸ் கருத்து

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்: ஓபிஎஸ் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா தங்களை அழைக்காதது வருத்தம்தான் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம், கடந்த 2 நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளுடனும், மாவட்ட வாரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

    கூட்டத்தின் முடிவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக 88 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்திருக்கிறோம். அதன் அடிப்படையில், அடுத்த 15 நாட்களில் மீண்டும் 38 வருவாய் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டு நிலையான முடிவை அறிவிப்போம்.

    இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது. அதை மக்களவை தேர்தல் வரை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உண்மையில் எங்களை அழைக்காதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது, சாதாரண தொண்டர்களும் கட்சியின் பொதுச் செயலாளராக வரும் உரிமையை, வாய்ப்பை தொண்டர்களுக்கு வழங்கினார். தொண்டர்களுக்கான இயக்கம், பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் 9 கட்சிகள் உள்ளன. யார் தலைமையில் கூட்டணி என்று அனைத்து கட்சிகளும் கூடி முடிவெடுப்போம். தனிப்பட்ட முறையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், பழனிச்சாமியை தவிர்த்து அனைத்து தலைவர்களும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

    நடிகர் விஜய் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தபோதே, அதை நான் வரவேற்றேன். அவரது இலக்கு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அவரது அரசியல் ரீதியான செயல்பாடுகளை பார்க்கும்போது தான் தெரியவரும். இன்றுவரை அவர் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்.

    அதிமுகவில் எம்ஜிஆர், எந்த சட்டவிதியை திருத்தம் செய்யவும், ரத்து செய்யவும் கூடாது என்று வரையறுத்து எழுதினாரோ அதற்கெல்லாம் பங்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாதான் நிரந்தர பொது செயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இவை எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது. அதை மீட்கதான் உச்சநீதிமன்ற வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறோம். இதுதொடர்பான 6 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் சூட்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் தீர்ப்பு இறுதியானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுகவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றி பெற முடியாது. இது பொதுமக்கள், கட்சிக்காரர்கள் ஆகியோரின் எண்ணம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

    July 16, 2025
    மாநிலம்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    July 16, 2025
    மாநிலம்

    “திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்பேன்” – திருமாவளவன் உறுதி

    July 16, 2025
    மாநிலம்

    “பாமகவில் சிக்கலான சூழ்நிலை இல்லை” – எம்எல்ஏ அருள் தகவல்

    July 16, 2025
    மாநிலம்

    “செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்பது வரலாற்றுப் பிழை” – ராமதாஸ் விவரிப்பு

    July 16, 2025
    மாநிலம்

    திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!
    • கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு அமைதியாக தீங்கு விளைவிக்கும் 5 பொதுவான துணை தவறுகள்
    • மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
    • மனதை நிர்வகிப்பதற்கான சிறந்த பயிற்சியாகும் என்று ஒரு முன்னணி மனநல மருத்துவர் – டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி
    • “திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்பேன்” – திருமாவளவன் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.