Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கோரியது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
    மாநிலம்

    உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கோரியது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

    adminBy adminMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கோரியது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார்.

    இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    இதன்மூலமாக, பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை.

    மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள் கொள்வதில் இறுதி தீர்ப்பளிக்கும் உரிமை கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கும் நேரடியாக சவால் விடுகிறது.

    ஆளுநர்கள் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்? சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, ஆளுநர்களின் முட்டுக்கட்டையை பாஜக சட்டபூர்வமாக்க முயல்கிறதா? பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளை மத்திய அரசு முடக்க எண்ணுகிறதா?

    மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளை திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய பாஜக அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கு இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது.

    இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன்.

    நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸும் உருக்கமான கடிதம்

    July 13, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: புதுச்சேரியில் பழனிசாமி உறுதி

    July 13, 2025
    மாநிலம்

    விண்ணுக்கு மனிதர்கள் பயணிக்கும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்

    July 13, 2025
    மாநிலம்

    இத்தனை தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து

    July 13, 2025
    மாநிலம்

    மதுரையில் கடைகளை அகற்ற ரூ.30 லட்சம் லஞ்சம்: திமுகவினர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    July 13, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் வென்றால் கூட்டணி ஆட்சியா? – அமித் ஷா கருத்துக்கு பழனிசாமி மறுப்பு

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸும் உருக்கமான கடிதம்
    • தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: புதுச்சேரியில் பழனிசாமி உறுதி
    • விண்ணுக்கு மனிதர்கள் பயணிக்கும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்
    • இணையத்தில் ட்ரோலுக்கு ஆளான சாய் அபயங்கர் – பின்னணி என்ன?
    • இத்தனை தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.