Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் – 21 நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது எப்படி?
    தேசியம்

    பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் – 21 நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது எப்படி?

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் – 21 நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது எப்படி?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாகிஸ்தான் ராணுவத்தால் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட பிஎஸ்எப் ஜவான் பூர்ணம் குமார் ஷா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை பாகிஸ்தான் ராணுவம் எவ்வாறு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) ஜவான் பூர்ணம் குமார் ஷா, ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் பாகிஸ்தான் காவலில் இருந்த இவர் நேற்று அமிர்தசரஸ் அட்டாரி இணைச் சோதனைச் சாவடியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

    தற்போது, பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கண்கள் கட்டப்பட்டு, தூங்க விடாமல் தடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பூர்ணம் குமார் ஷா உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படவில்லை என்றாலும், எல்லையில் உள்ள பிஎஸ்எப் நிலைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவர் பல் துலக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏப்ரல் 23 அன்று ஃபெரோஸ்பூர் செக்டாரில் பணியில் இருந்த போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால், அவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். 24வது பட்டாலியனைச் சேர்ந்த ஷா, கைது செய்யப்பட்டவுடன் பாகிஸ்தானில் உள்ள மூன்று இடங்களுக்கு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு இடம் விமானப்படை தளத்துக்கு அருகில் இருந்துள்ளது, அங்கு அவர் விமானங்களின் சத்தங்களைக் கேட்க முடிந்ததாக சொல்லியுள்ளார்.

    மேலும், ஒரு இடத்தில், அவர் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டார். அப்போது எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தான் அதிகாரிகள், பொதுமக்கள் உடையில் ஷாவிடம் எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் குறித்த விவரங்களைக் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) குழுக்களுடன் தொடர்புடைய 9 பயங்கரவாத முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அட்டாரி-வாகா எல்லையில் நேற்று இந்திய அதிகாரிகளிடம் பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இந்திய ராணுவத்தால் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், ராணுவ நெறிமுறையின்படி பாகிஸ்தான் காவலில் இருந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் பரிசோதிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

    மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பி.கே.ஷா, இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எப்-ன் ‘கிசான் காவல்படை’யில் ஜவானாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

    July 5, 2025
    தேசியம்

    இமாச்சலில் கனமழைக்கு இதுவரை 69 பேர் உயிரிழப்பு: ரூ.700 கோடிக்கு உள்கட்டமைப்புகள் சேதம்

    July 5, 2025
    தேசியம்

    பிஹாரில் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் பாக்கெட்டில் ராகுல் படம்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    • அமெரிக்காவின் சிறந்த மருத்துவர் பொதுவான பழக்கவழக்கங்களை எச்சரிக்கிறார், அவை அமைதியாக குடலுக்கு தீங்கு விளைவிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுக ஆட்சி அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்: இபிஎஸ் அறிவிப்பு
    • புற்றுநோய்க்கு பிந்தைய உடற்பயிற்சி திட்டம் மரணம் மற்றும் மறுநிகழ்வு விகிதங்களைக் குறைக்கிறது, ஒரு ஆய்வின்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளி அடக்கம் தவறானது: 166 பேரின் எச்சங்கள் மற்றும் கஞ்சா விதைகள் பசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளாகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.