Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»செஞ்சியில் ஒரே மையத்தில் பிளஸ் 2 வேதியியலில் 167 பேர் சென்டம் எப்படி? – கல்வி அலுவலர் விளக்கம்
    கல்வி

    செஞ்சியில் ஒரே மையத்தில் பிளஸ் 2 வேதியியலில் 167 பேர் சென்டம் எப்படி? – கல்வி அலுவலர் விளக்கம்

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    செஞ்சியில் ஒரே மையத்தில் பிளஸ் 2 வேதியியலில் 167 பேர் சென்டம் எப்படி? – கல்வி அலுவலர் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் ஓரே மையத்தில் பிளஸ் 2 வேதியியல் பாட தேர்வில் 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 8-ம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தேர்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    தேர்ச்சி சதவீதம் 95.11 ஆகும். இந்நிலையில், செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், முழுமூச்சாக படித்து தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மன உளைச்சலில் உள்ளனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறும்போது, “செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 414 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என 167 பேர், வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இம்மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்கள். பிளஸ்-1 பொதுத்தேர்வில் சிறந்த விளங்கியவர்கள். பிளஸ்-2 வகுப்பில் குறுந்தேர்வு நடத்தி சிறந்த முறையில் ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மாநில அளவில் 3,181 மாணவ – மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இயற்பியல் பாடத்தைக் காட்டிலும் வேதியியல் பாடத்தில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியிருந்தனர். தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும் படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர்.

    வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேர்வு மையங்களில் துணை இயக்குநர் குழந்தைராஜன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை பள்ளிக் கல்வித் துறையிடம் அளிக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 36,731 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு

    July 18, 2025
    கல்வி

    தமிழகம் முழுவதும் நாட்டுப்புற கலை பயிற்சிக்கான சேர்க்கை இன்று தொடக்கம்!

    July 18, 2025
    கல்வி

    8-ம் வகுப்பு தனித்தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    July 17, 2025
    கல்வி

    அரசு உதவிபெறும் நகர்ப்புற பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் ஏமாற்றம்!

    July 16, 2025
    கல்வி

    போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்

    July 16, 2025
    கல்வி

    வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 13

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கலோன்ஜி Vs ஜீரா: முடி வளர்ச்சியை உண்மையில் விரைவுபடுத்துவது எது? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவுக்கு துரோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை
    • சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? – படக்குழு விளக்கம்
    • தொழில்நுட்ப மேம்பாட்டு பணி ஆக.3, 4-ம் தேதிகளில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் செயல்படாது
    • தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம்: ஜூலை மாதம் முதல் அமல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.