Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சாவிலும் இணை பிரியவில்லை: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு
    தேசியம்

    சாவிலும் இணை பிரியவில்லை: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாவிலும் இணை பிரியவில்லை: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பிறந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பாத்திமா, ஜைன் அலியும் இறந்தனர்.

    இதுகுறித்து இருவரின் தாய்மாமாவான ஆதில் பதான் கூறும்போது, “பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கிராமங்களில் இருந்த 27 பேர் உயிரிழந்தனர். அதில் உர்பா பாத்திமாவும், ஜைன் அலியும் அடங்குவர். கடந்த 7-ம் தேதி தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்கியது.

    இரட்டையர்களாகப் பிறந்து இணை பிரியாமல் வசித்து வந்த இருவரும், குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரு நிமிட இடைவெளியில் உயிரிழந்து விட்டனர். இந்தத் தாக்குதலில் இவர்களின் தந்தை ரமீஸும் காயமடைந்தார்.

    அவர் பூஞ்ச் மாவட்டம் மண்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் குண்டுவீச்சுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் பூஞ்ச் மாவட்டத்துக்கு பாத்திமாவும், ஜைன் அலியும் படிப்பதற்காக சென்றனர். கடந்த மாதம் 25-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய 12 நாட்களிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.

    தாக்குதல் நடப்பதை அறிந்த நான் அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் அவர்களுக்கு அருகிலேயே குண்டுவெடித்து அவர்களை பலிகொண்டு விட்டது. உர்பா பாத்திமா, ஜைன் அலி, ரமீ்ஸ் ஆகியோரை ஜீப்பில் மருத்துவமனைக்கு நான்தான் அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு செல்வதற்கு இருவரும் உயிரிழந்தனர்.

    2 குழந்தைகளும் உயிரிழந்தது அவர்களது தந்தை ரமீஸுக்கு இதுவரை தெரியாது. அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகளின் தாய் உர்ஷா, மருத்துவமனையில் அவரை கவனித்து வருகிறார்” என்றார்.

    பிறக்கும்போதே இரட்டையர்களாக பிறந்த உர்பா பாத்திமா, ஜைன் அலி ஆகியோர், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    September 14, 2025
    தேசியம்

    ‘இந்தியா vs பாக். ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது’ – ஹர்ஷ் கோயங்கா

    September 13, 2025
    தேசியம்

    இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: டெல்லியில் திரையிடும் கிளப்களுக்கு எச்சரிக்கை

    September 13, 2025
    தேசியம்

    பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்

    September 13, 2025
    தேசியம்

    “நேபாளத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு சுசீலா கார்கி வழிவகுப்பார்” – மோடி நம்பிக்கை

    September 13, 2025
    தேசியம்

    சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியாது: தேர்தல் ஆணையம்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து
    • உடைந்த இதய நோய்க்குறி என்றால் என்ன, அதிலிருந்து யாராவது உண்மையில் இறக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி
    • தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
    • பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.