Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»திரும்பி வராத வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்காலிக வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி – IPL 2025
    விளையாட்டு

    திரும்பி வராத வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்காலிக வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி – IPL 2025

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திரும்பி வராத வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்காலிக வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி – IPL 2025
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ கடந்த 12-ம் தேதி அறிவித்தது. திருத்தியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி லீக் ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று 29, 30 மற்றும் ஜூன் 1-ம் தேதியும் இறுதிப் போட்டி 3-ம் தேதியும் நடைபெறுகின்றன.

    இதனால் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திருப்பி அனுப்ப நடடிவக்கை எடுக்கும்படி ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

    சிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 11-ம் தேதி லண்டனில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடும் காகிசோ ரபாடா (குஜராத் டைட்டன்ஸ்), லுங்கி நிகிடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), எய்டன் மார்க்ரம் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), ரியான் ரிக்கல்டன் (மும்பை இந்தியன்ஸ்), கார்பின் போஷ் (மும்பை இந்தியன்ஸ்), மார்கோ யான்சன் (பஞ்சாப் கிங்ஸ்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இதனால் இவர்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க திருப்பி அனுப்புவது கடினம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் தொடரின் பழைய அட்டவணையின்படி இறுதிப் போட்டி மே 25-ம் தேதி முடியும் வகையில் இருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 26-ம் தேதி தாயகம் திரும்பும் வகையில் திட்டமிட்டு இருந்தனர். இதன் பின்னர் 30-ம் தேதி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க புறப்பட்டுச் செல்ல முடிவு செய்திருந்தனர். இந்த திட்டத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இப்போதும் உறுதியாக உள்ளது.

    தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறும்போது, “ஐபிஎல்-பிசிசிஐ உடனான எங்கள் ஆரம்ப ஒப்பந்தம், இறுதிப் போட்டி 25-ம் தேதி நடைபெறும், எங்கள் வீரர்கள் 26-ம் தேதி தாயகம் திரும்புவார்கள் என்பதுதான். ஏனெனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக 30-ம் தேதி நாங்கள் புறப்படுவதற்கு முன்பு வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். தற்போதைய நிலையில், நாங்கள் இதில் பின்வாங்கவில்லை. எங்கள் வீரர்கள் 26-ம் தேதி திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    பூர்வக்குடிகளுக்கு துயரமான நாளை ‘ஆஸ்திரேலிய தினம்’ என்று கொண்டாடுவதா? – கில்லஸ்பி கேள்வி

    July 12, 2025
    விளையாட்டு

    T20 WC 2026: முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலி!

    July 12, 2025
    விளையாட்டு

    இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்தியா 145/3 – லார்ட்ஸ் டெஸ்ட் 2-ம் நாள் ஹைலைட்ஸ்

    July 12, 2025
    விளையாட்டு

    இறுதிப் போட்டியில் அல்கராஸ் – சின்னர் பலப்பரீட்சை: விம்பிள்டன் டென்னிஸ்

    July 12, 2025
    விளையாட்டு

    ஹாக்கியில் தமிழக அணி வெற்றி!

    July 12, 2025
    விளையாட்டு

    டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட் | ENG vs IND

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம்: விமான போக்குவரத்து அமைச்சர்
    • திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் தரிசனம்!
    • புதுச்சேரியில் ரூ.18,000-க்கு விற்ற புலாசா மீன்!
    • இந்த இயற்கை வழிகளில் பருவமழை உடல்நல அபாயங்கள் மற்றும் ஈரப்பதத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அகமதாபாத் விமான விபத்துக்கு இன்ஜின் ஷட் டவுன் காரணம்: முதற்கட்ட அறிக்கையில் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.