Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்
    மாநிலம்

    இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் வெற்றி கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் ‘மூவர்ண கொடி பேரணி’ சென்னை புதுப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுப்பேட்டை சித்ரா தியேட்டர் அருகில் நேற்று மாலை தொடங்கிய பேரணி எல்ஜி சாலை வழியாக சென்று இறுதியில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் ரவுண்டானா அருகில் முடிவடைந்தது. பேரணியின்போது, அனைவரும் தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

    பேரணியின் முடிவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: பிரதமர் மோடி 2 பெண்கள் மூலம் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் வாலாட்டுவதற்கு இங்கு நடப்பது ஒன்றும் காங்கிரஸ் ஆட்சி அல்ல. பாஜகவின் ஆட்சி. மோடியின் ஆட்சி. யாரிடம் வேண்டுமானாலும் பாகிஸ்தான் வாலாட்டலாம். நரேந்திர மோடியிடம் மட்டும் வாலாட்டினால், வாலை ஒட்ட நறுக்கிவிடுவது மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது.

    மொழியாலும், இனத்தாலும் இந்தியாவை பிளவுப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு ட்ரோன் மூலம் குண்டுகள் மட்டுமே கிடைக்கும். இந்த போர் தொடங்கி 15 நாட்களில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு மேலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்று கார்கில் போரில் வாஜ்பாய் வென்றார். இன்று பாகிஸ்தானை வெல்ல போகிறார் மோடி. இனி இதுபோல் நடந்தால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் இல்லாமல் போகும். அதை மோடி செய்துகாட்டுவார். இவ்வாறு அவர் பேசினார்.

    ஹெச்.ராஜா பேசும்போது, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதுக்கு காரணம் அப்போதையை பிரதமர்களாக இருந்த நேருவும், இந்திரா காந்தியும் தான். இவர்கள் செய்த தவறினால் இன்று மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்போது இந்தியாவிடம் ஒப்படைப்பீர்கள். தீவிரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள். இவை மட்டுமே இனி பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கும்’ என்றார்.

    தமிழிசை பேசும்போது, ‘இந்த தீவிரவாத தாக்குதலில் பிரதானமாக உபயோகப்படுத்தப்பட்டது, இந்தியாவில் உற்பத்தியான ராணுவ தளவாடங்கள் தான். காங்கிரஸ் ஆட்சியில் 86 தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு தாக்குதலுக்கு கூட திருப்பி அடிக்கவில்லை. ஆனால், நாம் திருப்பி அடிக்கும் பிரதமரை பெற்றிருக்கிறோம்,’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும்” – மார்க்கண்டேய கட்ஜூ

    December 2, 2025
    மாநிலம்

    கோவைக்கு நவ.19-ல் பிரதமர் மோடி வருகை: 3,000 போலீஸார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்

    December 2, 2025
    மாநிலம்

    கடும் பணி நெருக்கடி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு – வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு

    December 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

    December 2, 2025
    மாநிலம்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

    December 2, 2025
    மாநிலம்

    நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் – வைகோ தகவல்

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி
    • “சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுடன் சேர்க்க வேண்டும்” – மார்க்கண்டேய கட்ஜூ
    • திமுக, அதிமுகவால் ‘டேக் ஆஃப்’ ஆகாத மதுரை விமான நிலையம்!
    • உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நிறுத்துவதற்கான சிறந்த உணவுப் பழக்கத்தை இருதயநோய் நிபுணர்கள் வெளிப்படுத்துகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு பெரிய சூரிய புள்ளி பூமியின் பக்கம் சுழலும் போது ஏன் ஒரு சிறிய சூரிய புள்ளி வெடித்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.